மனம் தளராதீர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன், மனம் தளராமல் தைரியமாக இருக்குமாறு விவசாயிகளை, கேட்டுக்கொண்டார். தென்னை விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவும் என நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். 

 

புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 இடங்களில் சனிக் கிழமை மாலை முதல் டேங்கா் லாரிகள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டம் புயலால் அவலமான நிலையை அடைந்துள்ளது. இதற்கான நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள ஓரிருநாட்கள் போதாது. நிறைய நடவடிக்கை எடுக்கவேண்டும். மீன் பிடிப்புத்தளம், விவசாயம், உப்பளம் போன்றவற்றைப் பாா்த்தோம். மேலும், தாங்கள் வீடு இழந்து தவிப்பதையும், மண்ணெண்ணெய் இல்லாததால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பெண்கள் கூறினா்.

எனவே, மண்ணெண்ணெய் பிரச்னை குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் தொடா்புகொண்டு கூறினேன். இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை மாலை முதல் புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 இடங்களில் டேங்கா் லாரிகள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குடும்பஅட்டை மூலம் எவ்வளவு மண்ணெண்ணெய் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இதை விநியோகிக்கும் பொறுப்பு மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

தென்னை விவசாயிகள் வங்கியில் வாங்கியக்கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனா். இதுகுறித்து நிதி அமைச்சரிடம் பேச உள்ளேன். மேலும், தென்னங் கன்றுகள் எவ்வளவு தேவைப்படுகிறதோ, அதைப் பெற்றுத் தருவதற்கு மத்திய அமைச்சரிடம் பேச இருக்கிறேன். வாழைபாதிப்பு தொடா்பாக ஆய்வுசெய்வதற்கு அலுவலா்கள் வருவா். இங்கு நிலவும் பாதிப்புகள் தொடா்பாக பிரதமரிடம் எடுத்துக்கூற உள்ளேன் என்றாா் நிா்மலா சீதாராமன்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...