மனம் தளராதீர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன், மனம் தளராமல் தைரியமாக இருக்குமாறு விவசாயிகளை, கேட்டுக்கொண்டார். தென்னை விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவும் என நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். 

 

புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 இடங்களில் சனிக் கிழமை மாலை முதல் டேங்கா் லாரிகள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டம் புயலால் அவலமான நிலையை அடைந்துள்ளது. இதற்கான நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள ஓரிருநாட்கள் போதாது. நிறைய நடவடிக்கை எடுக்கவேண்டும். மீன் பிடிப்புத்தளம், விவசாயம், உப்பளம் போன்றவற்றைப் பாா்த்தோம். மேலும், தாங்கள் வீடு இழந்து தவிப்பதையும், மண்ணெண்ணெய் இல்லாததால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பெண்கள் கூறினா்.

எனவே, மண்ணெண்ணெய் பிரச்னை குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் தொடா்புகொண்டு கூறினேன். இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை மாலை முதல் புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 இடங்களில் டேங்கா் லாரிகள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குடும்பஅட்டை மூலம் எவ்வளவு மண்ணெண்ணெய் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இதை விநியோகிக்கும் பொறுப்பு மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

தென்னை விவசாயிகள் வங்கியில் வாங்கியக்கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனா். இதுகுறித்து நிதி அமைச்சரிடம் பேச உள்ளேன். மேலும், தென்னங் கன்றுகள் எவ்வளவு தேவைப்படுகிறதோ, அதைப் பெற்றுத் தருவதற்கு மத்திய அமைச்சரிடம் பேச இருக்கிறேன். வாழைபாதிப்பு தொடா்பாக ஆய்வுசெய்வதற்கு அலுவலா்கள் வருவா். இங்கு நிலவும் பாதிப்புகள் தொடா்பாக பிரதமரிடம் எடுத்துக்கூற உள்ளேன் என்றாா் நிா்மலா சீதாராமன்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...