உண்மை வெற்றி பெற்றுள்ளது

கோர்ட் தீர்ப்பு மூலம் அனைத்து குற்றச சாட்டுகளும் பொய்யாகியுள்ளது. ரபேல் அவசியத்தை தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது.  உண்மை என்றாவது வெளி வந்தே தீரும். பொய்க்கு ஆயுட்காலம் குறைவு. குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் அனைத்து வகையிலும் தோல்வியடைந்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒப்பந்தம் ஏன் இறுதி செய்யப்படவில்லை.

தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டது ஏன். காங்., ஆட்சியில் விமானப்படையில் தேவையை புறக்கணித்தது ஏன்? அனைத்து குற்றச்சாட்டுகளும் கற்பனையானது. இதன்மூலம் தேசிய பாதுகாப்பில் சமரசம்செய்ய முயன்றனர். ரபேல் ஒப்பந்தம் பாதுகாப்பு மற்றும் வணீகரீதியில் இந்திய நலன்களை பாதுகாக்கும். இறுதி செய்யப்பட்ட விலையானது, பேச்சு வார்த்தையின் போது கூறப்பட்ட விலையை விட குறைவு. ரபேல் குறித்து பார்லிமென்டில் விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், எதிர்க் கட்சிகள் தயங்கி செல்வது ஏன். ஒப்பந்தத்தை மறு ஆய்வுகுறித்து கோர்ட் உத்தரவு மூலமே செய்ய முடியும். உண்மைக்கு ஒருமுகம் மட்டுமே இருக்கும். ஆனால், பொய்க்கு பல வடிவங்கள் உள்ளன. என்றார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

மத்திய பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:

ரபேல் விவகாரத்தில் தலையிட முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ரபேல் ஒப்பந்தத்தை மத்திய அரசு அனைத்து வழிகளையும் பின்பற்றி இறுதி செய்ததை நீதிமன்றம் அங்கிகரித்து உள்ளது. இந்த விவகாரத்தில் கோர்ட் நன்கு ஆராய்ந்து தீர்ப்புவழங்கியுள்ளது. மத்திய அரசின் முடிவை கோர்ட் ஏற்று கொண்டுள்ளது. விலை நிர்ணயத்தை கேள்விக்குள்ளாக வில்லை.

விமானங்களின் விலை குறித்த தகவலை சீல் வைத்த கவரில் கோர்ட்டில் அளித்தோம். விலைசரியாக உள்ளதாக நீதிபதிகள் கூறினர். ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிகள் ஏற்றுகொண்டனர். வழக்கு விசாரணைக்கு ஏற்றது இல்லை என நீதபதிகள் தெளிவாக தெரிவித்தனர். வர்த்தகரீதியாக, மத்திய அரசு யாருக்கும் சாதமாக நடக்கவில்லை.டசால்ட் இந்தியாவில் தொழில் கூட்டாளியை தேர்வுசெய்வதில் தலையிடவில்லை. 36 போர் விமானங்கள் வாங்குவது குறித்து விமானப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவுசெய்யப்பட்டது..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...