துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை

டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கரை சந்தித்து பேசி உள்ளார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில், அது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்தும், நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கவர்னரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கர், ‘ஜனாதிபதிக்கே சுப்ரீம்கோர்ட் உத்தரவிடுகிறது, நாட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது’ என்று கருத்து கூறி இருந்தார்.

இந்த கருத்து விமர்சனங்களை எழுப்பிய நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கரை டில்லியில் கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இன்று நிகழ்ந்து இருக்கிறது.

சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. தன்கர் சந்திப்பை தொடர்ந்து, மத்திய சட்டத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் ரவி சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று தெரிகிறது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சுப்ரீம் கோர்ட் கெடு விதித்து இருந்த நிலையில் நிகழ்ந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. துணை ஜனாதிபதி தன்கர், மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் அளித்த தீர்ப்பு குறித்து, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க கோரிக்கை வைப்பது அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி சட்ட வல்லுநர்களுடன் கவர்னர் ஆலோசிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.