ரபேல் விவகாரம் செயற்கையாக உருவாக்கப் பட்ட சூறாவளி போன்ற பிரச்னை ஆக்கப் பட்டதன் பின்னணியில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளார்.
டில்லியில் பேசிய அவர், சர்வதேச கார்ப்பரேட்கள் நடத்தும் குழப்பத்தில் எங்களுக்கு பங்கில்லை. உங்களின் கார்ப்பரேட் பொறாமை அல்லது போட்டிக்காக இந்தியாவின் நலனை விட்டுக்கொடுக்க வேண்டுமா? 2012 ம் ஆண்டு முதல் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டியால் இந்திய விமானப் படையின் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பு நலனை சர்ச்சையாக்கி உள்ளது.
ரபேல் விமானம் வாங்குவதில் உண்மையான ரூ.59,000 கோடி ஒப்பந்தம் முன்னரே வெற்றி அடைந் திருந்தால் நாடு மிகப்பெரிய இலக்குகளை எட்டி இருக்கும். முந்தைய காங்., அரசு 10 ஆண்டுகளாக ஒப்பந்த விவகாரத்தில் எந்தமுடிவும் எடுக்காமல் வீணடித்துள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் நவீன போர்க் கருவிகளை பயன் படுத்த துவங்கியபோதும் எந்தமுடிவும் எடுக்கப்பட வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.