ரபேல் விவகாரம் செயற்கையாக உருவாக்கப் பட்ட சூறாவளி போன்ற பிரச்னை ஆக்கப் பட்டதன் பின்னணியில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளார்.
டில்லியில் பேசிய அவர், சர்வதேச கார்ப்பரேட்கள் நடத்தும் குழப்பத்தில் எங்களுக்கு பங்கில்லை. உங்களின் கார்ப்பரேட் பொறாமை அல்லது போட்டிக்காக இந்தியாவின் நலனை விட்டுக்கொடுக்க வேண்டுமா? 2012 ம் ஆண்டு முதல் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டியால் இந்திய விமானப் படையின் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பு நலனை சர்ச்சையாக்கி உள்ளது.
ரபேல் விமானம் வாங்குவதில் உண்மையான ரூ.59,000 கோடி ஒப்பந்தம் முன்னரே வெற்றி அடைந் திருந்தால் நாடு மிகப்பெரிய இலக்குகளை எட்டி இருக்கும். முந்தைய காங்., அரசு 10 ஆண்டுகளாக ஒப்பந்த விவகாரத்தில் எந்தமுடிவும் எடுக்காமல் வீணடித்துள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் நவீன போர்க் கருவிகளை பயன் படுத்த துவங்கியபோதும் எந்தமுடிவும் எடுக்கப்பட வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.