அபிநந்தன் பத்திரமாக உள்ளார் பாகிஸ்தான் ராணும்

பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துவைக்கப்பட்டிருக்கும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை மீட்க வேண்டும் என்று இந்திய மக்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெனிவா போர் உடன்படிக்கையின்படி போர்க் கைதியை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், துன்புறுத்தக்கூடாது என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கு முன்பு பாகிஸ்தான் வசம் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர்களின் நிலை என்ன ஆனது என்பதுபற்றிய வரலாறைத் தேடி போது நமக்குக் கிடைத்த தகவல் இதோ..

இந்தியா – பாகிஸ்தான் இடையே 1999ம் ஆண்டு கார்கில் போர் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பில் இருந்தும் பயங்கரசண்டை மூண்டது. போரில் இந்தியா வெற்றி பெற்றாலும், மே 27ம் தேதி ஒரு துரதிருஷ்டவசமான நாளாக இருந்தது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக விமானத்தில் சென்ற விமானி நச்சிகேடா பாகிஸ்தானின் படாலிக் பகுதியில் குண்டு மழை பொழிந்துவிட்டுத் திரும்பினார்.

இரண்டாவது முறை தாக்குதல் நடத்த வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டு நச்சிகேடா மிக் 27 ரக விமானத்தில் ஏறி பறந்த போது, விமானம்,  நிலத்தில் இருந்து வானத்தைநோக்கி ஏவப்படும் ஏவுகணையால் தாக்கப்பட்டு எஞ்ஜினில் தீப்பற்றியது. உயிர்தப்பிக்க உடனடியாக அதில் இருந்து நச்சிகேடா வெளியே குதித்தார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைதுசெய்தது.

இந்த தகவல் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்திடம் தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இந்தியாவின் தொடர் நடவடிக்கைகளால் உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் பாகிஸ்தானுக்குக் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி பாகிஸ்தான் நச்சிகேடாவை விடுதலை செய்ய ஒப்புக் கொண்டது. இந்த நடவடிக்கையில் செஞ்சிலுவை சங்கத்தின் பங்கும் முக்கிய அங்கம் வகித்தது. கைது செய்யப்பட்டு 8 நாட்களுக்குப் பிறகு நச்சிகேடா, செஞ்சிலுவை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு வாகா எல்லை வழியாக 1999ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இந்தியா வந்தடைந்தார்.

போர் விமானத்தில் இருந்து குதித்ததால் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு தொடர் சிகிச்சையின் பலனாக உடல் நலம் தேறிய நச்சிகேடா, அலுவலகப் பணிகளை மட்டும்செய்து வந்தார். 2003ம் ஆண்டுதான் மீண்டும் விமானியாக பணியில்சேர்ந்தார்.

தனது அனுபவம் குறித்து ஆங்கில ஊடகங்களிடம் அவர் பகிர்ந்து கொண்டதாவது, நான் பிடிபட்டபோது எனது மனநிலை எப்படி இருந்தது என்பதை வார்த்தைகளால் சொல்லமுடியாது. மிகவும் கடினமாக இருந்தது. அந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க மரணம் ஒன்றே எளிய தீர்வாக இருக்கும் என்று நம்பினேன். ஆனால் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும், அவர் என் பக்கம் இருந்தார். 3 அல்லது 4 நாட்கள் அங்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பத்திரமாக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஒரு விமானி பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். விங் கமாண்டர் அபிநந்தன் ராணுவ விதிகளுக்கு உட்பட்டு மரியாதையுடன் நடத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபிறகு தேநீர் அருந்துவது போன்ற புகைப் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...