சன்னி தியோல் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்

பாஜக சார்பில் குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சன்னிதியோல் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். பஞ்சாப்பில் மே 19-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் முன்னிலையில் கடந்த 23-ம்தேதி பாஜகவில் இணைந்த நடிகர் சன்னி தியோல், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

நடிகர் சன்னி தியோலை எதிர்த்து குர்தாஸ்பூர் தொகுதியில் மாநிலகாங்கிரஸ் தலைவர் சுனில்ஜகார் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 26-ம்தேதி சுனில் ஜகார் தனது வேட்புமனுவை தாக்கல்செய்தார். இந்நிலையில், நேற்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து நடிகர் சன்னி தியோல் வாழ்த்து பெற்றார். இன்று காலை அவர் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

சன்னிதியோல் குறித்து பிரதமர் மோடி டுவிட்:

நடிகர் சன்னி தியோலை சந்தித்த புகை படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, சன்னிதியோல் மிகவும் பணிவுடையவர் , நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். குருதாஸ்புர் தொகுதியில் வெற்றிபெறுவார் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...