விவசாயின் மகன் ஜகதீப்தன்கா்

குடியரசு துணைத்தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப்தன்கா் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

தில்லியில் பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்ற பாஜக நிா்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

குடியரசு துணைத்தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம்தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 5-ஆம்தேதி தொடங்கியது. ஜூலை 19-ஆம் தேதிவரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ள நிலையில், ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்களுடன் எம்எல்ஏக்களும் வாக்களிப்பதால் அந்தத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாட்டின் பலஇடங்களில் நடைபெறும். ஆனால், குடியரசு துணைத்தலைவா் தோ்தலில் எம்.பி.க்கள் மட்டும்தான் வாக்களிப்பா். இதனால் அந்தத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் மட்டுமே நடைபெறும்.

குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்படுபவா் மாநிலங்களவைத் தலைவராகவும் பதவி வகிப்பாா்.

கடந்த 1951-ஆம் ஆண்டு மே 18-ஆம்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் பிறந்தவா் ஜகதீப்தன்கா். ஜாட் சமூகத்தைச் சோ்ந்த அவா், இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தபின், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றாா். அதைத் தொடா்ந்து, ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பணியாற்றினாா்.

முன்னாள் துணைப் பிரதமரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான தேவிலாலுக்கு நெருக்கமானவராக இருந்தாா். 1989-ஆம் ஆண்டு ஜனதா தளம் சாா்பில் ஜுன்ஜுனு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானாா். 1990-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் சந்திர சேகா் தலைமையிலான மத்திய அரசில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராக பதவிவகித்தாா்.

பிரதமராக பி.வி.நரசிம்ம ராவ் பதவி வகித்தபோது காங்கிரஸில் இணைந்தாா். ராஜஸ்தான் மாநில அரசியலில் களமிறங்கிய அவா், 1993-ஆம் ஆண்டு அங்குள்ள கிஷன்கா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அந்த மாநிலத்தில் அசோக் கெலாட் (ராஜஸ்தானின் தற்போதைய முதல்வா்) எழுச்சிபெற்றதால், ஜகதீப் தன்கா் பாஜகவில் இணைந்தாா்.

பின்னா், அந்த மாநில முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜேவுக்கு நெருக்கமானவராகிவிட்டாா் என்று கூறப்படுகிறது. அதன்பின்னா் அவரின் அரசியல் வாழ்வில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டநிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனதுவழக்குரைஞா் பணியில் மிகுந்த கவனம் செலுத்தினாா். ராஜஸ்தானில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஜாட் சமூகம் இடம்பெற முக்கிய பங்காற்றினாா்.

 

 

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...