தீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சியினர்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தினமும் தாக்குதல் நடத்தி வந்தனர். அதனால் எந்தநகரமும் பாதுகாப்பின்றி இருந்தது. 2008ல் மும்பையை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றது எப்படி என்பதை நாட்டுமக்கள் நன்கறிவார்கள்.

அத்துடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நின்றுபோனதா? இல்லை. 2008 ஜனவரியில் உ.பி.யிலும், மே மாதம் ஜெய்ப் பூரிலும், ஜூலையில் பெங்களூருவிலும், அடுத்த நாளில் அகமதா பாத்திலும், செப்டம்பரில் இருபயங்கரவாத தாக்குதல், அக்டோபரில் கவுகாத்தி, அகர்தலா, இம்பாலில் தொடர் குண்டு வெடிப்புகள் என அனைத்து நகரங்களிலும் பயங்கரவாத தாக்குதல் நடடைபெற்றது.

ஐபிஎல் தொடர் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. ஆனால் கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தென் ஆப்ப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டன.

சிலதினங்களுக்கு முன்பு மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான தொடர் நடவடிக்கைகளை பாஜக எடுத்தது. எனவே, தற்போது உலகமே இந்தியாவை பற்றி பேசி வருகிறது.

”நாங்கள் 6 துல்லிய  தாக்குதல்களை நடத்தினோம் என காங்கிரஸ் இப்போது உரிமை கோருகிறது. எதற்காக தாக்குதல்கள் நடைபெற்றன, எந்தத்தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர் என்பது குறித்துத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கும் இதுதெரியாது. சொல்லப்போனால் இந்தியர்களுக்கே இது தெரியாது.அவர்கள் வீடியோ கேமில் தான் Surgical strike நடத்தியிருப்பார்கள்
..

நம்முடைய (பாஜக) தாக்குதலை முதலில் அவர்கள் (காங்கிரஸ்) கேலி செய்தனர். பிறகு போராட்டம் செய்தனர். இப்போது ‘மீ டூ’ ‘மீ டூ’ என்கின்றனர்”

ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...