மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

 மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, பித்த வாந்தி யாவும் நீங்கும். உடலின் வெப்பம் குறையும். நல்ல பலத்தை உருவாக்கும்.
ரத்தமாகவே போகும் சிறுநீர், ரத்தமூலம், சீத இரத்தம் இவை நீங்கும்.

மாதுளை உலர்ந்த பூ, கசகசா, வேம்பு இம்மூன்றையும் தனித்தனியாகத் தூள் செய்து, சமமாக எடுத்து, பிறகு ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினம் 3 வேளை, ஐந்து மிளகு அளவு இத்தூளை எடுத்து பாலுடன் கலந்து கொடுக்க நாளடைவில் மேற்கண்ட நோய்கள் நீங்கிக் குணமாகும்.

வாந்தி, மயக்கம், உஷ்ணம் ஆசனக் கடுப்பு, ரத்த மூலம் இவை நீங்க
தேவையான மாதுளம் பூக்களை எடுத்து அதன் பிழிந்த சாறு, அரை அவுன்ஸ் இதனுடன் கொஞ்சம் கற்கண்டு சேர்த்து தினமும் தொடர்ந்து 3 நாட்களுக்கு காலை – மாலை 2 வேளை சாப்பிட்டு வந்தால் படிப்படியாக நிவர்த்தியாகும்.

இருமல் குணமாக

உலர்ந்து உள்ள மாதுளை மொக்கை எடுத்து நன்றாக இடித்துச் சூரணமாக்கி, ஒரு உளுந்து பிரமாணம் எடுத்து சாப்பிட்டுச் சிறிதுத் தண்ணீர் அருந்த இருமல் நீங்கும்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...