இடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு

மேற்குவங்க காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு முன் திறந்துவைத்த பாலம் அதற்குள் இடிந்து விழுந்துவிட்டது என கூறும் பதிவு புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் லைக் செய்திருக்கிறார். இந்தபதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவுகளில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், இதுவும் வழக்கம் போல காங்கிரஸ் கட்சியின் மோடிக்கு எதிரான அவதூறு என்பதும் தெரிய வருகிறது.  புகைப்படத்தில் இடிந்து விழுந்ததாக கூறப்பட்ட பாலம் குஜராத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் திறக்கப்பட்டது ஆகும்.

மேற்குவங்க காங்கிஸ் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில்: நரேந்திர மோடி அறிவித்த திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டு பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ஜாம்நகர்-ஜூனாகர் நெடுங்சாலை பாலம், மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்து விட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரலாகும் புகைப்படத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ்சர்ச் மூலம் தேடியதில், இந்த பாலம் ஜூன் 19 ஆம் தேதி இடிந்து விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தபாலத்தை மூன்று மாதங்களுக்கு முன் நரேந்திர மோடி திறந்துவைக்கவில்லை. வைரல் பதிவுகளில் கூறப்படும் இடிந்து விழுந்தபாலம் கட்டமைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

இந்தபாலத்தை கட்டமைக்க கற்கள் அதிகளவு பயன்படுத்தப் படுகின்றன. இதுபோன்ற கட்டுமானங்களில் கற்களை பயன்படுத்தும் வழக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டது. தற்போதைய கட்டுமானங்களில் கான்க்ரீட்தான் பெரும்பாலும் பயன்படுத்த படுகின்றன.

அந்தவகையில் குஜராத் மாநிலத்தில் இடிந்துவிழுந்த பாலத்தை நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு முன் திறந்து வைக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...