மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். குழந்தைகளின் துயரமடைந்த குடும்பங்களுக்காக அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
“மத்திய பிரதேச மாநிலம் சாகரில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.”
“மத்திய பிரதேசத்தின் சாகரில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து இதயத்தை உடைக்கிறது. இதில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |