நிர்மலா சீதாராமன் மத்தியபட் ஜெட்டை தாக்கல் செய்தார்

நாடாளுமன்றத்தில் 2ஆவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் 2019-2020-ம் நிதியாண்டுக்கான மத்தியபட்ஜெட்டை இன்று தாக்கல்செய்தார். இது அவர் தாக்கல்செய்த முதல் பட்ஜெட்டாகும். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 2019-2020-ம் ஆண்டுக்கான முழுமையான மத்தியபட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்பட வில்லை. எனினும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சராக இருந்த பியூஷ்கோயல் தாக்கல் செய்திருந்தார்.

இதில் மக்களை கவரும் நல்ல பலதிட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடந்துமுடிந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது. அப்போது நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இந்தநிலையில் அவர் கடந்த ஒருமாதமாக முழுபட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் பட்ஜெட்டுக்கு முன்பே தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை நேற்றைய தினம் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்தார்.

சூட்கேஸுக்கு பதிலாக சிவப்பு நிறபையில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டுவந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை தொடங்கிவைத்த நிர்மலா பட்ஜெட்டை தாக்கல்செய்தார். அவர் கூறுகையில் நாங்கள் முதலில் பதவியேற்றபோது, இந்தியா, 1.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. சிலவருடங்களில் அதை 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றினோம். இன்னும் சிலவருடங்களில் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம். “சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்துகாட்டியுள்ளோம்” என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

One response to “நிர்மலா சீதாராமன் மத்தியபட் ஜெட்டை தாக்கல் செய்தார்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...