தமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் கடந்தவாரம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். இதையடுத்து ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றவிழாவில் தெலங்கானா மாநில பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தர ராஜன் பதவியேற்று கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திராசிங் சவுகான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநராக பதவியேற்று கொண்ட தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் பூங்கொத்துகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மேடையை விட்டு கீழேசென்ற தமிழிசை சவுந்தராஜன், தமது தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் காலில்விழுந்து வாழ்த்துபெற்றார். இவ்விழாவில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக் குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தெலங்கானா மாநில உயர் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...