எங்கள் குடும்பம் வெளிப்படையானது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக தேசியசெயற்குழு கூட்டம் கடந்த சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு முக்கியபிரமுகர்கள் ஹைதராபாத் வந்திருந்தனர்.

இரண்டு நாள் நடைபெற்ற பாஜக தேசியசெயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதை குறிவைத்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது. தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி நடந்துவருகிறது. தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை பெரும்சக்தியாக மாற்ற முக்கிய யூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தை நோட்டமிட்டு அங்கு புகைப்படங்களை எடுத்த தெலங்கானா மாநில உளவுத்துறை அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டியும் உறுதிபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் கட்சியில் எந்த ரகசியமும் இல்லை. நாங்கள் ஜனநாயகப்பூர்வமான கட்சி. இதுஒன்றும் குடும்ப கட்சி அல்ல. இந்த சூழலில் அத்துமீறி எங்கள் கூட்டத்தில் அந்த நபர் நுழைந்துள்ளார். இருந்தாலும் எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும்இல்லை. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்விற்கு தேவைப் பட்டால் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை அனுப்பி வைக்கிறோம். ஆனால், கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அதைநோட்டமிடுவது தவறானது என்றார்.இந்த சம்பவம் தொடர்பாக மத்தியஅமைச்சர் பியூஷ் கோயலும், எங்கள் குடும்பம் வெளிப்படையானது. எனவே, எங்கள் நடவடிக்கையில் எந்தரகசியமும் இல்லை என்றுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...