எங்கள் குடும்பம் வெளிப்படையானது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக தேசியசெயற்குழு கூட்டம் கடந்த சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு முக்கியபிரமுகர்கள் ஹைதராபாத் வந்திருந்தனர்.

இரண்டு நாள் நடைபெற்ற பாஜக தேசியசெயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதை குறிவைத்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது. தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி நடந்துவருகிறது. தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை பெரும்சக்தியாக மாற்ற முக்கிய யூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தை நோட்டமிட்டு அங்கு புகைப்படங்களை எடுத்த தெலங்கானா மாநில உளவுத்துறை அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டியும் உறுதிபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் கட்சியில் எந்த ரகசியமும் இல்லை. நாங்கள் ஜனநாயகப்பூர்வமான கட்சி. இதுஒன்றும் குடும்ப கட்சி அல்ல. இந்த சூழலில் அத்துமீறி எங்கள் கூட்டத்தில் அந்த நபர் நுழைந்துள்ளார். இருந்தாலும் எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும்இல்லை. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்விற்கு தேவைப் பட்டால் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை அனுப்பி வைக்கிறோம். ஆனால், கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அதைநோட்டமிடுவது தவறானது என்றார்.இந்த சம்பவம் தொடர்பாக மத்தியஅமைச்சர் பியூஷ் கோயலும், எங்கள் குடும்பம் வெளிப்படையானது. எனவே, எங்கள் நடவடிக்கையில் எந்தரகசியமும் இல்லை என்றுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...