கள்ளக் குறிச்சி கள்ளச்சாரய மரணம் தொடர்பாக சென்னை ஆளுநர் மாளிகையில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர ராஜன், திருப்பதி நாராயணன் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது ஆளுநரிடம், கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்ணாலை வலியுறுத்தியதாக தெரிகிறது.
ஆளுநரை சந்தித்தபிறகு தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “பாஜக நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து சிலகோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். கள்ளக் குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி இறந்து கொண்டிருப்பதும், நூற்றுக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும், தமிழ்நாடு அரசு அந்தவழக்கை வழிநடத்திச் செல்லும்முறை சரியாக இல்லை என்பது எங்கள் கருத்து. இந்தக் குற்றத்தில் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்தவழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப் பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த விசாரணை மாநில அரசைத் தாண்டிச் செல்லாது” என்றார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |