ஜனநாயக படுகொலை காங்கிரஸ்தான் காரணம்

மகாராஷ்டிர அரசியலை முன்வைத்து அமளியில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் எம்பிக்களை கண்டித்துள்ள பாஜக, பாராளுமன்றமாண்பை காப்பாற்றவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போதுஅவர், காங்கிரஸ் கட்சியையும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சாடினார்.

அப்போது பேசிய அவர்,”பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், மகாராஷ்டிர அரசியலை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அதனால், அவைநடவடிக்கைகள் முடங்கின. கட்டுக்கடங்காத நடத்தையை காங்கிரஸ் எம்பிக்கள் கைவிட்டு விட்டு, பாராளுமன்றத்திற்கு வரவேண்டும். அவையின் மாண்பையும், சிறந்த பாரம்பரியத்தையும் அவர்கள் காப்பாற்றவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும்,”மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துவிட்டதாக காங்கிரஸ்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையில், அங்கு ஜனநாயகத்தை கொலை செய்யப்பட நாங்கள்அல்ல, காங்கிரஸ்தான் காரணம் ” என்று சாடினார்.

மேலும்,”மகாராஷ்டிர மாநிலமக்கள், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்கே பெரும்பான்மை தந்தனர். ஆனால், காங்கிரஸ் அந்த பெரும் பான்மையை திருடிவிட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, சிவசேனாவுடன் கைகோர்த்துவிட்டது” என்று ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...