இலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை

இலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் இந்திய வம்சாவழியினருக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கிலேயே குடியுரிமை சட்டம் திருத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றில் உள்ள சிறுபான்மையினர் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அவர்கள், வேறு எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், அதன் காரணமாகவே அவர்களுக்கு அடைக்களம் கொடுக்கும் நோக்கில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாகக் குறிப்பிட்டார். பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் என்பதால்,அங்குள்ள முஸ்லிம்கள் மத ரீதியில் துன்புறுத்தப்பட வாய்ப்பு இல்லை என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழி செய்யும் என்று அவர் கூறினார். இந்த சட்டத்திருத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் குறித்து தெரிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், இலங்கைத் தமிழர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்று குறிப்பிட்டார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...