காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாராளுமன்ற தொகுதியான வயநாட்டில், அக்கட்சி சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. அதில் பேசிய ராகுல்காந்தி, ‘பிரதமர் மோடி மற்றும் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஆகியோரின் சித்தாந்தங்கள் ஒன்றுதான், ஒருவேறுபாடும் இல்லை’ என்று கூறினார்.
இந்நிலையில், பல தசாப்தங்களாக இந்த நாட்டை ஆண்ட ஒருகுடும்பத்தில் பிறந்ததற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவை பிளவுபடுத்த விரும்பும் அனைவருடனும் ராகுல்காந்தி துணை நிற்கிறார். அவர் யாருடன்நிற்கிறார் என யாரிடமாவது கேட்டுப்பாருங்கள் அவர்கள் கூறுவார்கள். ராகுல் காந்தி ஷர்ஜீல் இமாம் உடன் துணை நிற்கிறார், அவர் உமர்காலித் உடன் நிற்கிறார், அவர் ஜாகிர் நாயக்கோடு நிற்கிறார், அவர் ஹபீஸ் சயீத் மற்றும் புர்ஹான்வானி மற்றும் இம்ரான் கான் ஆகியோருடன் நிற்கிறார். இந்தபட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. பல தசாப்தங்களாக இந்த நாட்டை ஆண்ட ஒருகுடும்பத்தில் பிறந்ததற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்’ என பாஜக எம்பி நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |