பிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி

பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறைகளைப் பற்றி நன்குஅறிந்த அறிவாளி எனவும் உலகளவில் சிந்தித்து உள்நாட்டிற்கு ஏற்றவாறு செயல்படுத்த கூடியவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா.

2020ஆம் ஆண்டிற்கான சர்வதேச நீதித் துறை மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. அதில், 20 நாடுகளில் இருந்து பலநீதிபதிகள் கலந்து கொண்டனர். விழாவை, பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். விழாவில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா, நீதித்துறைக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவில் ஏற்படும் நெருக்கடிகள் சாதாரணமானவை. இருந்தாலும், நீதித் துறை, இந்த உலகத்தை சீரமைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், “கண்ணியமான மனிதர்கள் அதிகமாக இருக்கவேண்டும் என்பதே எங்களது முக்கியமான நோக்கம். பல்வேறு துறைகளைப்பற்றி நன்கு தெரிந்த அறிவாளியான பிரதமர் மோடிக்கு இந்த தருணத்தில் நன்றிகூற கடமைப் பட்டிருக்கிறேன். அவர், உலகளவில் சிந்தித்து, அதனை நம் நாட்டிற்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்துவார்” என புகழாரம் சூட்டினார்.

மேலும், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு எனவும் உலகில் உள்ள மக்கள், இந்தியா எப்படி இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று வியந்து பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல், சர்வதேசளவில் மிகவும் பொறுப்பான மற்றும் மிகவும் நட்பான நாடு இந்தியா எனவும் குறிப்பிட்டார்.

One response to “பிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...