தமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த தவறாத பிரதமர்

தமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த தவறாத நமது பிரதமர் நரேந்திரமோடிக்கு என மனமார்ந்த நன்றிகள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்று கிழமை அன்று நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுவது பிரதமர் நரேந்திர மோடியின் வழக்கம்.

அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி 62-வது மன்கீ பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் தனது உரையில் “கேரளாவில் பகீரதி என்ற மூதாட்டி 9 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தினார். ஆனால் தற்போது 105 வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி 75% மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழ் கவிஞர் ஔவையார் கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என கூறியிருக்கிறார் கேரளாவில் பகீரதி மூதாட்டி அனைவருக்கும் முன்மாதிரியானவர். உத்வேகம் அளிக்கக்கூடியவர். அவரை நான் வணங்குகிறேன்” என்றார்.

பிரதமர் மோடியின் மான் கீ பாத்தின் உரையை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனதுடுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தமிழை ஒவ்வொரு முறையும் பெருமைப்படுத்த தவறாத நமது பிரதமர் நரேந்திரமோடிக்கு என் மனமார்ந்த நன்றிகள். மான் கீ பாத் நிகழ்ச்சியில் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு என்று தமிழ் கவிஞர் ஔவையாரின் மேற்கொளை குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் சபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தமிழ் இலக்கியங்களை குறிப்பிட்டு பேச மறந்தது இல்லை ” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...