டெல்லி வன்முறை செய்திகளை ஒளிபரப்பியதில், எல்லைமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி, ஏசியாநெட் நியூஸ் மற்றும் நியூஸ் ஒன் டிவி, என்ற இருமலையாள டிவி சேனல்களை, அடுத்த, 48 மணி நேரம் ஒளிபரப்புவதற்கு மத்தியசெய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இன்று தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி, ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன்டிவி ஆகிய இருசேனல்களும் செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி அடுத்த 48 மணி நேரத்துக்கு, 2 சேனல்களையும் ஒளிபரப்புவதற்கு, செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல், அந்த இருசேனல்களின் டிவி திரையும் கருப்பு வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. மார்ச் 8ம் தேதி, இரவு 7.30 மணிக்கு மேல்தான் அவை தங்கள் ஒளிபரப்பை மீண்டும் துவக்கமுடியும்.
இந்த இருசேனல்களும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றும் ஒருசார்புடைய செய்திகளை ஒளிபரப்பியதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் டெல்லி காவல் துறையை இழிவுபடுத்தும் வகையில் செய்தி ஒளிபரப்பிய தாகவும், குற்றஞ் சாட்டியுள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்ககூடிய பகுதிகளில்தான் வன்முறை நடந்துள்ளதாகவும், அந்தசேனல்கள் தங்களது செய்திகளில் கூறுகின்றன. கல் வீசுவது, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபடுவது போன்ற காட்சிகளையும் அந்தசேனல்கள் ஒளிபரப்பி உள்ளன. சட்டம்ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இந்தசெய்திகள் இருந்தன. இவ்வாறு அந்த உத்தரவில் செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |