டெல்லி கலவரம் ஏசியாநெட் உட்பட 2 மலையாள டிவி சேனல் ஒளிபரப்புக்கு 48 மணி நேர தடை

டெல்லி வன்முறை செய்திகளை ஒளிபரப்பியதில், எல்லைமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி, ஏசியாநெட் நியூஸ் மற்றும் நியூஸ் ஒன் டிவி, என்ற இருமலையாள டிவி சேனல்களை, அடுத்த, 48 மணி நேரம் ஒளிபரப்புவதற்கு மத்தியசெய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இன்று தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி, ஏசியாநெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன்டிவி ஆகிய இருசேனல்களும் செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி அடுத்த 48 மணி நேரத்துக்கு, 2 சேனல்களையும் ஒளிபரப்புவதற்கு, செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல், அந்த இருசேனல்களின் டிவி திரையும் கருப்பு வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. மார்ச் 8ம் தேதி, இரவு 7.30 மணிக்கு மேல்தான் அவை தங்கள் ஒளிபரப்பை மீண்டும் துவக்கமுடியும்.

இந்த இருசேனல்களும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றும் ஒருசார்புடைய செய்திகளை ஒளிபரப்பியதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் டெல்லி காவல் துறையை இழிவுபடுத்தும் வகையில் செய்தி ஒளிபரப்பிய தாகவும், குற்றஞ் சாட்டியுள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்ககூடிய பகுதிகளில்தான் வன்முறை நடந்துள்ளதாகவும், அந்தசேனல்கள் தங்களது செய்திகளில் கூறுகின்றன. கல் வீசுவது, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபடுவது போன்ற காட்சிகளையும் அந்தசேனல்கள் ஒளிபரப்பி உள்ளன. சட்டம்ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இந்தசெய்திகள் இருந்தன. இவ்வாறு அந்த உத்தரவில் செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...