அரச இலையின் மருத்துவக் குணம்

 அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தாது விருத்தி செய்யும், சுரத்தையும், முத்தோட கோபத்தையும் போக்கும்.

 

இதன் இலையை பழுப்பாக எடுத்து நன்றாக எரித்துக் கரியாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்து தீப்பட்ட புண்களில் மயிலிறகால் தடவி வர இரணம் விரைவில் ஆறிப் போகும். இதன் இலையை, கொழுந்துடன் அரைத்து பாலில் அவித்து சர்க்கரைச் சேர்த்து உண்ண, சுரம், வாத, பித்த, சிலேத்துமரோகங்கள் போகும். சுக்கிலம் விருத்தியாகும்.

பட்டையை இடித்துப் பொடி செய்து துணியில் சலித்து, தேன் சேர்த்துக் கொடுக்க தீராத விக்கல் தீரும்.

பட்டைத் தூளில் 15 கிராம் அல்லது 30 கிராம் எடுத்து குடிநீர் செய்து கொடுக்க சொறி சிரங்குகள் குணமாகும். உடல் வெப்பம் குறையும். தூளைப் புண்களின்மேல் தூவ புண்கள் ஆறும்.

நன்னாரிப் பட்டை, அத்தி, அரசு, ஆல், இத்தி, நாவல் மரப்பட்டைகளை, சமனாக எடுத்து இடித்துக் குடிநீர் செய்து முறைப்படி 1 லிட்டர் நீர், நல்லஎண்ணெய் 1 லிட்டர், அதிமதுரம், சின்ன இலவங்கப் பட்டை, வெட்டி வேர், கோட்டம், சந்தனம் வகைக்கு 10 கிராம் எடுத்து பசும்பாலில் விட்டரைத்து மேற்படி குடிநீரில் சேர்த்து கலக்கித் தீயில் எரித்துப் பக்குவமாகத் தைலம் செய்து, சொறி, சிரங்குகள், கரப்பான் நோய்களுக்குத் தடவ விரைவில் குணமாகும்.

இம்மரத்தை ஆணியால் குத்தினால் பால் வரும். அதை எடுத்துக் காலில் உள்ள பித்த வெடிப்புக்குத் தடவ வெடிப்புகள் நீங்கிக் குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.