கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம்

ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு அபாயம் தொடர்பான கவலை அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் கேம்கள் மீதான பிடியை அரசு மேலும் இறுக்கமாக்கியுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் 2022 முதல் 2024 ஆகிய காலகட்டத்தில், 1298 ஆன்லைன் சூதாட்டம், பெட்டிங், கேமிங் இணையதளங்களை முடக்க உத்தரவு பிறப்பித்ததாக பத்திரிகை தகவல் அமைப்பு, பிஐபி தெரிவிக்கிறது.

“ஆன்லைன் கேமிங் தொடர்பான இடர்களையும், அடிமையாக்கும் தன்மை போன்ற ஆபத்துகளை அரசு அறிந்திருக்கிறது,” என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷணவ் மக்கள் அவையில் தெரிவித்தார்.

கேமிங் மேடைகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான நெறிமுறைகள் கொண்ட தகவல் தொழில்நுட்ப (இடைப்பட்ட நிறுவனங்கள் நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக அறம்) விதிகள், 2021ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மேடைகள், சட்டவிரோதமான உள்ளடக்கத்தை குறிப்பாக, சூதாட்டம், பண மோசடி அல்லது சிறார்களுக்கு பாதிப்பான உள்ளடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

2022 – 2024 காலத்தில், ஆன்லைன் சூதாட்டம், கேமிங்க், பெட்டிங் தொடர்பான 692 தளங்கள் மற்றும் செயலிகள் முடக்கப்பட உத்தரவிடப்பட்டதாக, டிசம்பர் மாதம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா மக்களைவையில் தெரிவித்திருந்தார். ஜிஎஸ்டி இயக்குனரகம், ஜிஎஸ்டி செலுத்தாமல் ஏமாற்றும் ஆன்லைன் கேமிங் தளங்கள் மற்றும் செயலிகளை முடக்கலாம், என நிதி அமைச்சகம் ஜனவரி மாதம் அனுமதி அளித்தது. வரி ஏய்ப்பை தடுக்கவும், டிஜிட்டல் கேமிங் துறையில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசின் டிஜிட்டல் கட்டுப்பாடு முயற்சிகள் கேமிங் துறையோடு நின்றுவிடவில்லை. ஆன்லைன் ஆபாசம், குறிப்பாக மைனர்கள் தொடர்பான உள்ளடக்கம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் வைஷ்ணவ் எழுத்து மூலமான பதிலில் தெரிவித்தார்.

ஆபாசமான மற்றும் பாலியல் தூண்டுதல் உள்ளடக்கத்தை வெளியிட்டால், ஐடி சட்டம் கடுமையான தண்டனை விதிக்க வழி செய்கிறது. மேலும், 2021 விதிகள், மூன்றாம் தரப்பு உள்ளடக்கம் தொடர்பாக இடைப்பட்ட நிறுவனங்கள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என எச்சரிக்கிறது. வல்லுறவு, சிறார் பாலியல் தாக்குதல், பாலியல் தூண்டும் உள்ளடக்கம் தொடர்பான குற்றங்களில் செய்தியை முதலில் பகிர்ந்தவரை சமூக ஊடக மேடைகள் அடையாளம் காட்ட வேண்டும். மேலும், தனியுரிமை மீறும் அல்லது பாலியல் சார்ந்த உள்ளடக்கத்தை இந்த மேடைகள் 24மணி நேரத்தில் அகற்ற வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

துணிச்சலாக பணியாற்றிய பெண் அதி� ...

துணிச்சலாக பணியாற்றிய பெண் அதிகாரிக்கு விருது 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, ஜம்மு - காஷ்மீரின் ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...