இபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளியே வராதீர். வீட்டை விட்டு வெளியே வரவே வராதீர்

உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டுமக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழுபொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றிபெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி கொரோனா செயல்பட்டுவருகிறது. வளர்ந்த நாடுகள்கூட கடுமையாக போராடி வருகிறது.

 

என்ன நடந்தாலும் வெளியே வராதீர்கள். இந்தியா ஒரு இக்கட்டில் இருக்கும்போது நமது செயல்கள் தான் இதைக் கையாளுவதற்கான நமது திறனை வெளிக்காட்டும்.இந்த சூழ்நிலையில், அயராது பணிபுரியும் பணியாளர்களுக்கு எந்தவிதத்தில் நன்றி சொல்வது..?

இபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளியே வராதீர்கள். வீட்டை விட்டு வெளியே வரவே வராதீர்கள்.நீங்கள் தினமும் சந்திக்கும் மனிதர்கள் கொரோனாவை பரப்புகிறவர்களாக இருக்கலாம்.அடுத்த 21 நாட்களுக்கு யாரும் வெளியே வரக்கூடாது. வளர்ச்சியை விட பாதுகாப்பு மிக மிக முக்கியம்.வெளியே வரவேண்டும் என்பதை மறந்துவிடுங்கள். உங்கள் வீடுகளைச் சுற்றி லட்சுமணன் கோடு வரைந்து கொள்ளுங்கள்.

1 லட்சம் பேருக்கு இந்த தொற்றுபரவ வெறும் 67 நாட்கள்தான் ஆகும். அடுத்த 11 நாட்களில் அடுத்த 1 லட்சம் , அடுத்த 4 நாட்களில் அடுத்த 1 லட்சம்பேருக்கு தொற்று ஏற்பட்டு விடும்.கற்பனை செய்து பாருங்கள். இந்தியா போன்ற ஒருநாட்டில் அப்படி நடக்கவே கூடாது. ஒருமுறை கொரோனா வந்து விட்டால் அதன் அறிகுறிகள் வெளிப்பட சில நாட்களாகும். அதற்குள் பலருக்கும் பரவியிருக்கும்.என்ன தீர்வு? என்ன மாற்று? நம்மிடம் என்ன ஏற்பாடுகள் இருக்கின்றன? என்பதுதான் இப்போது இருக்கும் கேள்வி

 

இன்று இரவு 12 மணிமுதல் இந்தியா முழுமையாக முடக்கப்படுகிறது. இந்தியர்கள் யாரும் வெளியே வரக்கூடாது*மாநிலந்தோறும் அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் சமுகவிலகலைப் பின்பற்றினால் போதும் என்று சிலர் நினைக்கிறார்கள் அது தவறு.

உங்களுக்காக 24 மனி நேரமும் வேலை செய்யும் ஊடகவியலாளர்களை நினைத்துப் பாருங்கள்…

*உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* மத்திய,மாநில, சமூக நலத் தொண்டு நிறுவனங்களுக்கும் மோடி நன்றி.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...