முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை

”தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு அதிகாரம் தேவையில்லை” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் நன்றாக இருக்கிறேன். குடும்பம், ஆடு, மாடுகள் உடன் இருக்கிறேன். இந்த மாதிரி நேரம் கிடைத்தால் கோவிலுக்கு வருகிறேன். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சுற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. கட்சி சொல்லும் பணிகளை செய்கிறேன். தலைவராக இங்கு இருக்க வேண்டும், அங்கு இருக்க வேண்டும் என்பதை தவிர்த்து, என்னுடைய வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதில் பயணத்தை தொடர விரும்புகிறேன்.

மக்கள் பணி செய்கிறேன். வீட்டிற்கு வெளியே மோர் வைத்து கொடுக்கிறேன். தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் குடிக்கிறார்கள். புத்தகம் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்து இருக்கிறது. குழந்தைகளோடு நேரம் செலவிடுகிறேன். ஒரு தொண்டனாக பிரதமர் மோடிக்கு பணி செய்ய வேண்டும். எனது ஆசை பெரிது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்க கூடியவன். அதற்கான காலம் வரும். தொண்டனாக பணி செய்து கொண்டு இருக்கிறேன்.

ஓ.பி.எஸ்., பத்திரிகையாளர்கள் சந்திப்பை பார்த்தேன். தலைவர்கள் பதில் சொல்வார்கள். யாரும் பிரிந்து போகவில்லை. எல்லோரும் எங்கள் கூட தான் இருக்கிறார்கள். நமது கூட்டணி வலுவாக இருக்கிறது. நான் இன்று ஒரு தொண்டனாக பணி செய்து கொண்டு இருக்கிறேன். தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு அதிகாரம் தேவையில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...