முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை

”தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு அதிகாரம் தேவையில்லை” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் நன்றாக இருக்கிறேன். குடும்பம், ஆடு, மாடுகள் உடன் இருக்கிறேன். இந்த மாதிரி நேரம் கிடைத்தால் கோவிலுக்கு வருகிறேன். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சுற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. கட்சி சொல்லும் பணிகளை செய்கிறேன். தலைவராக இங்கு இருக்க வேண்டும், அங்கு இருக்க வேண்டும் என்பதை தவிர்த்து, என்னுடைய வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதில் பயணத்தை தொடர விரும்புகிறேன்.

மக்கள் பணி செய்கிறேன். வீட்டிற்கு வெளியே மோர் வைத்து கொடுக்கிறேன். தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் குடிக்கிறார்கள். புத்தகம் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்து இருக்கிறது. குழந்தைகளோடு நேரம் செலவிடுகிறேன். ஒரு தொண்டனாக பிரதமர் மோடிக்கு பணி செய்ய வேண்டும். எனது ஆசை பெரிது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்க கூடியவன். அதற்கான காலம் வரும். தொண்டனாக பணி செய்து கொண்டு இருக்கிறேன்.

ஓ.பி.எஸ்., பத்திரிகையாளர்கள் சந்திப்பை பார்த்தேன். தலைவர்கள் பதில் சொல்வார்கள். யாரும் பிரிந்து போகவில்லை. எல்லோரும் எங்கள் கூட தான் இருக்கிறார்கள். நமது கூட்டணி வலுவாக இருக்கிறது. நான் இன்று ஒரு தொண்டனாக பணி செய்து கொண்டு இருக்கிறேன். தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு அதிகாரம் தேவையில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...