”தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு அதிகாரம் தேவையில்லை” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் நன்றாக இருக்கிறேன். குடும்பம், ஆடு, மாடுகள் உடன் இருக்கிறேன். இந்த மாதிரி நேரம் கிடைத்தால் கோவிலுக்கு வருகிறேன். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சுற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. கட்சி சொல்லும் பணிகளை செய்கிறேன். தலைவராக இங்கு இருக்க வேண்டும், அங்கு இருக்க வேண்டும் என்பதை தவிர்த்து, என்னுடைய வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதில் பயணத்தை தொடர விரும்புகிறேன்.
மக்கள் பணி செய்கிறேன். வீட்டிற்கு வெளியே மோர் வைத்து கொடுக்கிறேன். தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் குடிக்கிறார்கள். புத்தகம் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்து இருக்கிறது. குழந்தைகளோடு நேரம் செலவிடுகிறேன். ஒரு தொண்டனாக பிரதமர் மோடிக்கு பணி செய்ய வேண்டும். எனது ஆசை பெரிது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்க கூடியவன். அதற்கான காலம் வரும். தொண்டனாக பணி செய்து கொண்டு இருக்கிறேன்.
ஓ.பி.எஸ்., பத்திரிகையாளர்கள் சந்திப்பை பார்த்தேன். தலைவர்கள் பதில் சொல்வார்கள். யாரும் பிரிந்து போகவில்லை. எல்லோரும் எங்கள் கூட தான் இருக்கிறார்கள். நமது கூட்டணி வலுவாக இருக்கிறது. நான் இன்று ஒரு தொண்டனாக பணி செய்து கொண்டு இருக்கிறேன். தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு அதிகாரம் தேவையில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |