தென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.

தென் கொரிய குடியரசுக்கு தான் சென்றவருடம் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் நட்புறவை குறித்து தனது திருப்தியை தெரிவித்தார்.

 

கோவிட்-19 தொற்றுகுறித்தும், அது உலகசுகாதார கட்டமைப்புக்கும் பொருளாதார நிலைமைக்கும் ஏற்படுத்தியுள்ள சவால்கள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர். பெரும்தொற்றை கட்டுப்படுத்த தங்களது நாடுகளில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

இந்தசிக்கலை எதிர் கொள்வதற்கு தொழில்நுட்பம் சார்ந்த பதில் நடவடிக்கையை எடுத்ததற்தாக தென்கொரிய குடியரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் பெரும் மக்கள் தொகையை ஒற்றுமை உணர்வோடு இந்தபெரும் தொற்றை எதிர்த்து போராடுவதற்காக ஊக்கப் படுத்தியதற்காக இந்திய அதிகாரிகளை அதிபர் மூன் ஜே-இன் பாராட்டினார்.

இந்தியாவிலுள்ள கொரியமக்களுக்கு இந்திய அதிகாரிகள் அளித்துவரும் ஆதரவுக்காக பிரதமருக்கு அதிபர் நன்றி தெரிவித்தார்.

இந்திய நிறுவனங்களால் வாங்கப் பட்டு வரும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் விநியோகங்களை ஆதரிப்பதற்காக கொரிய குடியரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

தங்கள் நாடுகளின் வல்லுநர்கள், கோவிட்-19க்கான தீர்வுகளை ஆய்வுசெய்யும் போது, ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து தொடர்பு கொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள் என இருதலைவர்களும் ஒத்துக்கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...