நெருக்கடியை, ஒருவாய்ப்பாக பயன்படுத்தி, திருப்பு முனையாக மாற்றுவோம்

”கொரோனாவால் நமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை, ஒருவாய்ப்பாக பயன்படுத்தி, திருப்பு முனையாக மாற்ற வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின், 95வது மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை, டில்லியில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக துவக்கிவைத்து, பிரதமர் மோடி கூறியதாவது:

கொரோனாவை எதிர்த்து, உலகநாடுகள் போராடி வருகின்றன; இந்தியாவும் போராடுகிறது. கொரோனா நெருக்கடிக்கு இடையே, நாம் மேலும்பல பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகிறோம். புயல், கனமழை, வெள்ளம், வெட்டுக் கிளி, எண்ணெய் கிணற்றில் தீ, நில அதிர்வு போன்ற பிரச்னைகளையும், நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதுபோன்ற பேரிடர்களை, வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம், நமக்கு புதியநம்பிக்கையை அளிக்கிறது.’

பல்வேறு சவால்களுக்கு இடையில் பணியாற்றுபவர்கள், புதியவாய்ப்புகளை பெறுகின்றனர். ஒற்றுமையும், வலிமையும்தான், அந்த சவால்களை சந்திப்பதற்கு, நம்மிடம் உள்ள உற்சாக மருந்து.தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை, நாம் ஒவ்வொருவரும், அரியவாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம், நாட்டில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்.அந்த திருப்புமுனை, ‘தற்சார்பு இந்தியா!’ தற்போது, நாம் பலபொருட்களை இறக்குமதி செய்து வருகிறோம். அவற்றை எப்போது, இந்தியாவிலேயே தயாரிக்க போகிறோம்; அவற்றை, நாம் எப்போது ஏற்றுமதி செய்ய போகிறோம் !இந்த உணர்வுடன், அதற்கான திசையில், நாம் அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன், சுவாமிவிவேகானந்தர், ‘இந்தியர்கள் அனைவரும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன் படுத்த வேண்டும். வெளிநாடுகளில், இந்தியப் பொருட்களுக்கான சந்தையை ஏற்படுத்த வேண்டும்’ என்றார். கொரோனாவிற்கு பிந்தைய உலகில், விவேகானந்தர் காட்டியபாதை, இந்தியாவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.உற்பத்தி துறையில், மேற்கு வங்கத்தின் வரலாற்று சிறப்புகளை நாம் புதுப்பிக்கவேண்டும். ‘வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ, அதை நாளை இந்தியா நினைக்கும்’ எனக் கூறப்படுவதை கேட்டிருப்போம். இதை முன் மாதிரியாக கொண்டு, நாம் இணைந்து முன்னேறுவோம்.

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக, இந்தியாவில் பிரசாரம் நடந்து வருகிறது. இதன் மூலம், மேற்குவங்கம் பெரிய பயனடையும். சணல் வணிகம் வளர்ச்சி பெறும். இவ்வாறு, பிரதமர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...