புதுமையான கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்குகிறோம் – பிரதமர் மோடி பெருமிதம்

“இந்த உலகுக்கு பூஜ்ஜியத்தை கொடுத்தது நம் நாடு. தற்போது உலகுக்கு புதுமை கண்டுபிடிப்புகளுடன், பிரச்னைகளுக்கான புதுமையான தீர்வுகளையும் வழங்குகிறோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

டில்லியில் நேற்று நடந்த தனியார் ‘டிவி சேனல்’ துவக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவை, பல ஆண்டுகளாக தங்களுடைய பின்புலத்தில் இருந்து சேவையை அளிக்கும் நாடாக உலக நாடுகள் பார்த்தன.

அதாவது உலக நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகள் நடக்கும் நேரத்தில், அதை பயன்படுத்தும் நாடாக இந்தியாவை பார்த்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது.

‘உள்ளூர் தயாரிப்பை ஊக்குவிப்போம்’ என்ற கோஷத்துடன், அந்த உள்ளூர் தயாரிப்பு உலகுக்கானதாக இருக்க வேண்டும் என்றோம்.

நம் தயாரிப்புகளுக்கு தற்போது உலகெங்கும் கிராக்கி உள்ளது. எவ்வித, ‘மேக்கப்’ போடாமல், நம் பொருட்களை அதன் உண்மை குணத்துடன் உலகுக்கு வழங்குகிறோம். அது, உலகெங்கும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கான, நம் யு.பி.ஐ., செயலியை உலகின் பல நாடுகள் பயன்படுத்துகின்றன. கொரோனா காலத்தில் நம் தடுப்பூசிகளுக்கு உலகெங்கும் கிடைத்த வரவேற்பே, இவற்றுக்கெல்லாம் சாட்சியாக உள்ளன.

நல்ல தரம், அதே நேரத்தில் குறைந்த செலவில் கிடைக்கும் என்பதால், நம் நாட்டின் பொருட்களுக்கு உலகெங்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது.

அத்துடன், வினியோக சங்கிலியில் இந்தியாவை முழுமையாக நம்பலாம் என்பதையும் உலக நாடுகள் ஏற்றுள்ளன.

இந்த உலகுக்கு பூஜ்ஜியத்தை அளித்தது நம் நாடு. தற்போது பல புதுமை கண்டுபிடிப்புகளையும், பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வுகளையும் அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

உலகின் உற்பத்தி தொழிற்சாலையாக இந்தியா விளங்குகிறது. நம்மிடம் இருப்பது வெறும் மனிதவளம் மட்டுமல்ல, உலகை மாற்றக்கூடிய தொழிலாளர் வளம்.

ராணுவ தளவாட தயாரிப்பில் இருந்து, இன்ஜினியரிங், தொழில்நுட்ப உற்பத்தியில் நாம் முன்னேறி வருகிறோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...