சீனாவின் நோக்கம் போர் அல்ல

எல்லையில் பதைபதைப்பு சீனா உட்பட உலகமே பொருளாதாரத் தேக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவுடன் எல்லையில் பிரச்சினையைக் கிளப்ப சீனாவுக்கு அப்படி என்ன அவசியம், அவசரம்? மிக முக்கியமான அவசியம் இருக்கிறது. அதுவும் அவசரமாக இருக்கிறது.

கொரானா வைரஸ் உலகமெங்கும் பரவியதற்கு சீனாவின் ரகசியமான ஆய்வுதான் காரணம் என்று உலக நாடுகள் முழுவது சீனா மீது அதீதகோபத்தில் இருப்பதுடன், அந்நாட்டுடனான வணிகத் தொடர்பினை முறித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. சில ஆயிரம் நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேற முடிவெடுத்து, பிறநாட்டில் நிறுவனத்தைத் தொடங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இது தொடருமானால், சீனாவின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குச் சரியும். உள்நாட்டுப் புரட்சிவெடிக்கலாம், சீனா பல நாடுகளாகச் சிதறலாம். இதிலிருந்து சீனா எப்படி தன்னைக் காத்துக்கொள்வது?

சப்ளைசெய்ன் எனப்படும் உலக நாடுகளின் உற்பத்தி மையமாக உயர்ந்துநின்ற சீனா தன் வர்த்தக மண்டலத்தை இழந்தால், அத்தனை கோடி சீனமக்களுக்கு வேலைகொடுக்க முடியாமல் திணறி பெரும் சேதத்தை அடையும் என்பது நிச்சியம். எந்த சூழலிலும் தன்பொருளாதார சந்தையில் யாரையும் உள்ளே அனுமதிக்காத சீனா, தன் அண்டை நாடான தென்கொரியாவுக்கு வெளிப்படையாக, “எங்கள் நாட்டிலிருந்து வெளியே செல்லாதீர்கள். வேண்டுமானால் தென்னாசிய பிராந்தியத்தின் சப்ளைச் செய்னில் நாம் இருவரும் இணைந்து செயல்படுவோம்” என்று அழைப்பு விடும் அளவிற்குப் பரிதவித்துப் போயிருக்கிறது.

என்ன நடவடிக்கை எடுத்தாலும், முதலில் உலக நாடுகளின் கோபம் குறையவேண்டும். அது உடனடியாக நடப்பதாகத் தெரியவில்லை. கால அவகாசம்தேவை. இடைப்பட்ட காலத்தில் சீனாவிலிருந்து வெளியேறும் பிறநாட்டு நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவே விரும்புகின்றன. அப்படி இந்தியாவில் தொழில் தொடங்க விருக்கும் நிறுவனங்களைக் குழப்பும் / தடுக்கும் வகையில் இந்தியாவுடனான போர் முகாந்திரத்தை உருவாக்க தொடங்கியிருக்கிறது.

இப்படி போர்பதட்டம் நிலவும் நேரத்தில் பெரு நிறுவனங்கள், உடனடியாக இந்தியாவுக்குள் தொழில் தொடங்குவதைக் கொஞ்சம் தள்ளிப் போடக்கூடும். அப்படித் தள்ளிப்போடும் கால அவகாசத்தைப் பயன்படுத்தி அந்த நிறுவனங்களுடன் மீண்டும் மீண்டும் சலுகை ஆசைகள் காட்டித் தன் நாட்டிலேயே தக்கவைத்துக் கொள்ளும் உத்திதான், இப்பொழுது இந்தியாவுடனான மோதலுக்கு முக்கியக் காரணம். இந்தப் பக்கம் போர் பயத்தைக் காட்டிக் கொண்டு அந்தப் பக்கம் நாங்கள் அமைதி விரும்பிகள். போரினை விரும்பவில்லை என்று நிறுவனங்களை நம்பச்செய்து கொண்டிருக்கிறது. என்னவாக இருப்பினும், சீனாவின் ராஜ தந்திரம் தோற்கிறது. இந்தியாவுடனான இந்த மோதல் போக்கு சர்வதேச அரசியலில் சீனாவிற்குப் பெரும் பின்னடைவினையே உருவாக்கி வருகிறது. குறிப்பாக தெற்காசியாவில் வடகொரியாவைத் தவிர மற்ற எல்லா நாடுகளின் வெறுப்பையும் முழுமையாகச் சம்பாதித்துள்ளது.

சீனா ஒருபோதும் எந்தச் சின்ன நாட்டுடணும் போருக்குத் தயாராக இல்லை என்பதும் மீறி போரிட்டால் வெற்றிபெறும் அனுபவமும் அதற்கு இல்லை என்பதும் அதன் போர்க்கள வரலாறு பட்டவர்த்தனமாக நிரூபித்துள்ளது. சீனா பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஜாம்பவன் தான். ஆனால், போர் உத்தியில் வியட்நாம், தாய்வான் அளவிற்குக்கூட கிடையாது. இந்தியாவுடன் போர் தொடுத்தால் சீனாவினா இமயமலை மற்றும் பாகிஸ்தான் பகுதியிலிருந்துதான் தாக்குதல் நடத்த முடியும். ஆனால், இந்தியாவோ, வியட்நாம், பிலிபைன்ஸ், தாய்வான், இந்தோனேசியா உட்பட பல நாடுகளிலிருந்து நேரடியாகத் தாக்குதல் நடத்த முடியும் என்ற விசயம் சீனாவுக்கும் தெரியும்.

ஆகவே, சீனாவின் நோக்கம் போர் அல்ல. தன் நாட்டிலிருந்து வெளியேறும் நிறுவனங்களுடன் சமாதானம் பேச கால அவகாசம் தேவை. அதற்கு இப்பொழுது லடாக் பகுதியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் பாரதமும், ஒருபக்கம் ராணுவ மோதல்களையும், இன்னொரு பக்கம் பொருளாதார உத்திகளையும் வெகு துரிதமாகச் செயல்படுத்தி வருகிறது. சதுரங்க விளையாட்டைக் கண்டு பிடித்ததே பாரதம் தான். நம்மிடமே சதுரங்கம் விளையாடினால் நிச்சியம் சீனாவிற்கு தோல்வி தான். வெற்றி பாரதத்திற்கே!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...