நுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிடம் தாரை வார்த்தவர்தான், மன்மோகன்சிங்

கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.  இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீனபடையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என தெரிகிறது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்ய கூடாது என்றும் கூறியிருந்தார். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்றுதுரோகம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் நூற்றுக்கணக்கான சதுர கிலோ மீட்டர்கள் இந்திய நிலப்பரப்பு சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டதை மறந்துவிட்டு, பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சிப்பதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றஞ்சாட்டி உள்ளார்.

மன்மோகன் சிங் அறிக்கைக்கு பதிலடியாக, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா வெளியிட்ட அறிக்கை: ராணுவவீரர்களை, மீண்டும் மீண்டும் அவமதிப்பதை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் நிறுத்தவேண்டும். இது மாதிரியான நேரங்களில் மட்டுமாவது, தேசப்பற்று என்பதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, திட்டமிட்டு சிதைக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் மாண்பு மற்றும் ராணுவத்தின் கம்பீரம் ஆகியவை, தற்போதைய தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது மீட்டெடுக்க பட்டுள்ளது.

பிரதமராக இருந்த போது, நுாற்றுக் கணக்கான இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் தாரை வார்த்தவர்தான், மன்மோகன்சிங். 2010லிருந்து, 2013 வரையில், 600க்கும் அதிகமான சீன ஊடுருவல்கள் நடந்த போது, பிரதமராக இருந்தவர் இவர்தான். தைரியமே இல்லாமல், 43 ஆயிரம் கி.மீ., பரப்பளவை, எந்தகட்சி, சீனாவுக்கு துாக்கித் தந்ததோ, அதேகட்சியை சேர்ந்தவர்தான், இந்த மன்மோகன்சிங். மன்மோகன் சிங், தன் சொந்தகட்சிக்கு, ஏதாவது புத்திமதியை சொல்வதே தற்போதைக்கு நல்லது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீது, ஒட்டுமொத்த இந்தியாவுமே நம்பிக்கை வைத்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.