நுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிடம் தாரை வார்த்தவர்தான், மன்மோகன்சிங்

கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.  இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீனபடையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என தெரிகிறது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்ய கூடாது என்றும் கூறியிருந்தார். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்றுதுரோகம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் நூற்றுக்கணக்கான சதுர கிலோ மீட்டர்கள் இந்திய நிலப்பரப்பு சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டதை மறந்துவிட்டு, பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சிப்பதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றஞ்சாட்டி உள்ளார்.

மன்மோகன் சிங் அறிக்கைக்கு பதிலடியாக, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா வெளியிட்ட அறிக்கை: ராணுவவீரர்களை, மீண்டும் மீண்டும் அவமதிப்பதை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் நிறுத்தவேண்டும். இது மாதிரியான நேரங்களில் மட்டுமாவது, தேசப்பற்று என்பதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, திட்டமிட்டு சிதைக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் மாண்பு மற்றும் ராணுவத்தின் கம்பீரம் ஆகியவை, தற்போதைய தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது மீட்டெடுக்க பட்டுள்ளது.

பிரதமராக இருந்த போது, நுாற்றுக் கணக்கான இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் தாரை வார்த்தவர்தான், மன்மோகன்சிங். 2010லிருந்து, 2013 வரையில், 600க்கும் அதிகமான சீன ஊடுருவல்கள் நடந்த போது, பிரதமராக இருந்தவர் இவர்தான். தைரியமே இல்லாமல், 43 ஆயிரம் கி.மீ., பரப்பளவை, எந்தகட்சி, சீனாவுக்கு துாக்கித் தந்ததோ, அதேகட்சியை சேர்ந்தவர்தான், இந்த மன்மோகன்சிங். மன்மோகன் சிங், தன் சொந்தகட்சிக்கு, ஏதாவது புத்திமதியை சொல்வதே தற்போதைக்கு நல்லது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீது, ஒட்டுமொத்த இந்தியாவுமே நம்பிக்கை வைத்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...