பிற நாடுகளின் இறையாண்மையை மதிக்கவேண்டும் – ஜின்பிங், இம்ரான்கான் முன்னிலையில் பிரதமர் பேச்சு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு, நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 8 உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் காணொலிகாட்சி மூலம் பங்கேற்றனர்.

ரஷிய அதிபர் புதின் தலைமை தாங்கினார். இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லடாக்கில் அத்துமீறும் சீனாவையும், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பாகிஸ்தானையும் கண்டிக்கும் வகையில், காணொலி காட்சியில் அந்த தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிடையே தகவல்தொடர்பை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா கருதுகிறது. அதற்கு நாம் முயற்சிக்கும் போது, ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப் பாட்டையும் மதிக்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

ஆனால், சில உறுப்பினர் நாடுகள் (பாகிஸ்தான்), தேவையின்றி இருதரப்பு பிரச்சினைகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு கொண்டு வர மீண்டும், மீண்டும் முயற்சிக்கின்றன. இது, இந்த அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.

கொரோனாவுக்கு எதிரானபோரில், தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும், வினியோகம் செய்வதிலும் இந்தியா ஈடுபடும். இந்த கொரோனாகாலத்தில், 150-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...