கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று வெளியிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கார்கில் போரில் நமது ராணுவ வீரர்களின் ஒப்பற்ற வீரம், உறுதி, தியாகம் ஆகியவற்றுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தபால் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.
கார்கிலின் திராஸ் பகுதியில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா பங்கேற்று பேசுகையில், இந்த தபால் தலை நமது ராணுவ வீரர்களின் தீரத்தை கௌரவிப்பது மட்டுமின்றி அவர்களின் வீரத்தை நினைவுபடுத்தவும், தேசத்தின் பெருமித உணர்வை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது என்றார். நமது வரலாற்றில் முக்கியமான தருணத்தை இந்த அர்த்தமுள்ள தபால் தலை வெளியீடு உருவாக்கி உள்ளது என்றும், இதற்காக தபால் துறையை பாராட்டுவதாகவும் அமைச்சர் கூறினார். இந்த தபால் தலையை அனைத்து குடிமக்களும் வாங்குவதற்கு தாம் ஊக்கப்படுத்துவதாகவும், இது வெறும் சேகரிப்புக்கானதல்ல, நமது நன்றியின் அடையாளம், நமது தேசத்தை பாதுகாத்தவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |