பாஜக மகளிரணியின் தேசியதலைவராக வானதி சீனிவாசனை சமீபத்தில் அக்கட்சியின் தேசியதலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தேசியளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது தமிழக பாஜகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் பாஜக மகளிரணியின் தேசியதலைவராக வானதி சீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். பாஜக மூத்த தலைவர்கள் இந்தநிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதிசீனிவாசன், தமிழகத்தில் ஆட்சியில் அமரவேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றார்.
பாஜக வகுக்கும் வியூகங்களை வெளியேசொல்ல முடியாது என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். கூட்டணி கட்சிகளிடையே மாற்றுக் கருத்துக்கள் இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் வானதிசீனிவாசன் குறிப்பிட்டார்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |