உமிழ்வில்லா மின்சாரவாகனம்

நாட்டில் மின்சார வாகனத்தை பிரபல படுத்தும் முயற்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம், ‘’உமிழ்வில்லா மின்சாரவாகனம்’’ குறித்த ‘’கருத்தியல் நிரூபண’’ சாத்தியக் கூறு ஆய்வை பெங்களூருவில் தனக்குசொந்தமான ஒரு எரிபொருள் நிலையத்தில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

‘’ஜீரோ உமிழ்வு மின்சாரவாகனம்’’ என்ற கருத்தியல், மின்சார வாகனத்திற்கு சூரிய சக்தியை பயன் படுத்துவதன் மூலம் ஜீரோ உமிழ்வை உறுதிசெய்வதாகும். மின்சார வாகன மின்னூட்ட முறையை, டெக்மகேந்திரா நிறுவனத்தின் ஆதரவுடனான ஹைக்கே எனர்ஜி என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. சூரிய சக்தியைப்பயன்படுத்தி, மின்சார வாகனங்கள் மின்னூட்டம் செய்யப்படும். மின்கட்டமைப்பில் மேம்பாடு தேவையில்லை. குறிப்பாக தொலைதூர பகுதிகளில், சிஸ்டம் உருவாக்கத்தால், தொகுப்பு விரிதிறன் மேம்படுத்தப்படும்.

இந்த சோதனை குறித்து உரையாற்றிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர்  விக்யான் குமார், ‘’இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாற்று எரிசக்தி அமைப்பின் ஒருபகுதியாக, நாங்கள் ஏற்கனவே மின்சார வாகனங்களுக்கான 54 மின்கல மின்னூட்ட நிலையங்களை/ஸ்வாப் நிலையங்களை, பல்வேறு நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் அமைத்துள்ளோம். இஸ்ரேலின் பின்னர்ஜியில், இந்தியாவில் மின் சார வாகனங்களுக்கான அலுமினியம் –ஏர் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தை அமைக்க சிறியளவு பங்குகளை நாங்கள் வைத்துள்ளோம்.

மின்சார வாகன பின்பற்றுதலில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால், தொகுப்புகொள்ளளவு மற்றும் சவால்களை எதிர்கொள்ள, எங்களது எரிபொருள் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டபசுமை எரிசக்தியை உறுதி செய்ய ஒருங்கிணைந்த தீர்வை கண்டுபிடிப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஹைக்கே எனர்ஜி உருவாக்கிய புதுமையான தீர்வு, இந்தப் பிரச்சினைகளை சமாளிக்கும் சாத்தியக் கூறை வெளிப்படுத்தியுள்ளது. பெங்களூரு முழுவதும் எரிசக்தி நிலையங்களில் முன்மாதிரி ஆய்வுகளை நாங்கள் நடத்தவுள்ளோம். எங்களது எரிபொருள் நிலையங்களை சூரிய எரிசக்தி மயமாக்குவதில் செய்யப்பட்ட முதலீட்டை இந்ததனித்துவமான தீர்வு ஊக்குவிக்கும். இது எங்களது மின்சார வாகன மின்னூட்ட முன்முயற்சியில் சிறந்த அடித்தளத்தை வழங்கும்’’, என்று கூறினார்.

இந்த தொழில்நுட்பம் ‘’வீரிய மைக்ரோகிரிட்ஸ்’’ –ஐ பயன்படுத்தி செயல்திறன்மிக்க மின்சார வாகன மின்னூட்டத்திற்கு வழிவகுக்கும். சூரிய சக்தி ஒளிமின்னழுத்த மின்கலங்களுடன், தற்போது உள்ள தொகுப்பு உள்கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் வீரிய மைக்ரோகிரிட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுகொண்ட இந்த ஜீரோ உமிழ்வு மின்சார வாகன முறை அதிகம் பின்பற்றக்கூடிய முறையாகும். 100 சதவீதம் தூய்மையான எரி சக்தியை வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு இது உருவாக்கபட்டுள்ளது. மின்சாரவாகன விநியோக உபகரணத்திற்கு கூடுதல்சுமையை இது தடுக்கிறது. இதன் பயனாக, தொகுப்பு கட்டமைப்புக்கு கூடுதல் முதலீடு இன்றி இந்த முறையை பயன்படுத்த முடியும்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...