மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மின்சார அமைச்சகம் சிறப்புபிரச்சாரம் 4.0-ஐ தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இது தூய்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், பல்வேறு அலுவலகங்கள் மற்றும் அலகுகளில் நிலுவையில் உள்ள விஷயங்களை விரைவாக அகற்றுகிறது. அனைத்து அளவுருக்களின் இலக்குகளும் செப்டம்பர் 16 முதல் ஆயத்த கட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டு 30 செப்டம்பர் 2024 அன்று எட்டப்பட்டுள்ளன. எம்.பி.க்கள், பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறைதீர்ப்புகள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நிலுவையில் உள்ள குறிப்புகளுக்கு பதில்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தூய்மை பிரச்சாரம், பதிவு மேலாண்மை, இடத்தை விடுவித்தல், வருவாய் ஈட்டுதல் போன்றவை இந்த அளவுகோல்களில் அடங்கும்.

செயல்படுத்தல் கட்டம் 2 அக்டோபர் 2024 அன்று தொடங்கியது. அது 31 அக்டோபர் 2024 வரை தொடரும். மின்சார அமைச்சகம் அதன் இலக்குகளை அடைவதில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 15 அக்டோபர் 2024 நிலவரப்படி, அமைச்சகம் ஏற்கனவே எம்.பி.க்களிடமிருந்து 42 குறிப்புகள் (58%), மாநில அரசுகளிடமிருந்து 16 குறிப்புகள் (27%) மற்றும் 3 அமைச்சகங்களுக்கு இடையிலான குழு  குறிப்புகளை (50%) அகற்றியுள்ளது. பொதுமக்கள் குறைகளைப் பொறுத்தவரை, அமைச்சகம் 177 குறைகளை (78%) 19 பொது குறை மேல்முறையீடுகளுடன் (50%) தீர்த்துள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 19,839 மற்றும் 4,937 கோப்புகளில் முறையே 13,377  கோப்புகள் மற்றும் 1,589 டிஜிட்டல் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இதில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, மேலும் 9490 கோப்புகள் களையெடுக்கப்பட்டுள்ளன, மேலும் 1581 மின்-கோப்புகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

செயல்திறனை மேலும் மேம்படுத்த 11 விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.கூடுதலாக, காலாவதியான மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் அமைச்சகம் 18,640 சதுர அடி இடத்தை விடுவித்துள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 346 இடங்களில் 79 இடங்கள் ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டுள்ளதால், தூய்மை இயக்கமும் வேகம் பெற்றுள்ளது.  அமைச்சகம் 3,155 மெட்ரிக் டன் ஸ்கிராப்பை அப்புறப்படுத்தி, ரூ.1.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

சிறப்பு பிரச்சாரம் 4.0-ன் நோக்கங்களை அடைவதற்கு மின்சார அமைச்சகம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது. செயலாளர்  தலைமையில். அக்டோபர் 2024 இறுதிக்குள் இயக்கத்தை வெற்றிகரமாக முடிப்பதை நோக்கிய தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக வழக்கமான மதிப்பாய்வுகள் நடத்தப்படுகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...