நமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகளில், 2 மடங்காக அதிகரிக்கும்

”இந்தியாவின் கச்சாஎண்ணெய் சுத்திகரிப்புதிறன், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு மடங்காக அதிகரிக்கும்,” என, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

குஜராத்தில், முதல்வர் விஜய்ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.காந்திநகரில் உள்ள பண்டிட் தீன் தயாள் பெட்ரோலியம் பல்கலையின் எட்டாம் ஆண்டு பட்டமளிப்புவிழா நேற்று நடந்தது.நடவடிக்கை விழாவில், ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாடு, தற்போது மாற்றத்தை நோக்கிசெல்கிறது. கொரோனா பரவல் காலத்தில் பட்டம் பெற்றுள்ள நீங்கள், எரிசக்திதுறையில் காலடி வைக்கப் போகிறீர்கள். எரிசக்தி துறையில் பலவாய்ப்புகள் குவிந்துள்ளன. இந்த, 10 ஆண்டுகளில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்யப்படஉள்ளன. அதனால், ஆராய்ச்சி முதல் தயாரிப்புவரை, எரிசக்திதுறையில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கார்பன் வெளியேற்றத்தை, 35 சதவீதம் குறைக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், நாம் முன்னேறி வருகிறோம்.

இந்த, 10 ஆண்டு காலத்தில், எரிசக்தி தேவைகளுக்கு, இயற்கை எரிவாயு பயன் பாட்டை, நான்கு மடங்கு அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அடுத்த ஐந்து ஆண்டுகளில், நம் நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இருமடங்காக அதிகரிக்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.’சுயசார்பு இந்தியா’ இயக்கத்துக்கான போர்வீரர்களாக, மாணவர்கள் இருக்க வேண்டும். எதிர்கால இந்தியாவை வடிவமைக்கும் பொறுப்பு, மாணவர்களிடம் உள்ளது.தட்டுப்பாடுநம் நாடு, 2022ம் ஆண்டில், 75 வது சுதந்திரதினத்தையும், 2047ல், 100 வது சுதந்திர தினத்தையும் கொண்டாட உள்ளது.

இந்த, 25 ஆண்டுகள்தான், உங்களுக்கு கிடைத்த பொற்காலம். குஜராத் முதல்வராக நான் பொறுப்பேற்றபோது, மாநிலத்தில், மின்தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. வீட்டுக்கும், விவசாயத்துக்கும் என, மின்சாரத்தை தனியாகபிரித்து வினியோகிக்க நடவடிக்கை எடுத்தேன். இதனால், 24 மணிநேரமும், விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவது சாத்தியமாயிற்று.முன்பிருந்த செயல்பாடுகளையே பின்பற்றியிருந்தால், 24 மணி நேரமும், மின்சாரம் வழங்கியிருக்க முடியாது.

மேலும், மின்சாரத்தை, யூனிட், 13 ரூபாய்க்கு மாநிலஅரசு வாங்கிக் கொண்டிருந்தது. இதை மாற்ற வேண்டும் என நினைத்து, சூரியமின்சக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது குஜராத், மின்சாரத்தில் தன்னிறைவுபெற்ற மாநிலமாக உள்ளது. நான் முதல்வராக இருந்தபோது தான், பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.இதை பெட்ரோலிய பல்கலை என அழைப்பதை விட, எரிசக்திபல்கலை என, அழைப்பது தான் சிறப்பாக இருக்கும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...