முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு குவளை அளவு குடித்து வரவேண்டும். 48 நாட்கள் பருக வேண்டும்.
தும்பை, குப்பைமேனி, கீழாநெல்லி, அத்தி, துளசி, ஆவாரம், சிறுகுறிஞ்சான், கோவை இலைகளை நன்கு நிழலில் உலர்த்திப் பொடித்து காலையும் மாலையும் நோய் தன்மைக் கேற்ப உட்கொள்ள வேண்டும், நோய் குணமாகும் வரை.
நாவல்பழக் கொட்டையை காய வைத்து பொடி செய்து தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சர்க்கரை ஆரம்ப நிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.
தண்ணீரில் மழைக் காலங்களில் வளரும் ஆரைக் கீரையைக் கொண்டு வந்து இடித்து சாறு எடுத்துக் காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். 48 நாட்கள் பருக வேண்டும்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.