முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு குவளை அளவு குடித்து வரவேண்டும். 48 நாட்கள் பருக வேண்டும்.
தும்பை, குப்பைமேனி, கீழாநெல்லி, அத்தி, துளசி, ஆவாரம், சிறுகுறிஞ்சான், கோவை இலைகளை நன்கு நிழலில் உலர்த்திப் பொடித்து காலையும் மாலையும் நோய் தன்மைக் கேற்ப உட்கொள்ள வேண்டும், நோய் குணமாகும் வரை.
நாவல்பழக் கொட்டையை காய வைத்து பொடி செய்து தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சர்க்கரை ஆரம்ப நிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.
தண்ணீரில் மழைக் காலங்களில் வளரும் ஆரைக் கீரையைக் கொண்டு வந்து இடித்து சாறு எடுத்துக் காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். 48 நாட்கள் பருக வேண்டும்.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.