இட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது

இந்திய அரசியலமைப்பில் உள்ளபடி, இடஒதுக்கீடு கொள்கையை, தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசியலமைப்பில் கூறியுள்ளபடி இடஒதுக்கீடு கொள்கையை, தேசியகல்வி கொள்கை 2020, ஆதரிக்குமா என்ற சந்தேகத்தை கடந்த நவம்பர் 24ம் தேதி வெளியான ஊடகதகவல்கள் எழுப்பின.

இதுகுறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். இடஒதுக்கீடு கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. இந்திய அரசியலபை்பில் கூறியுள்ள இடஒதுக்கீட்டை தேசியகல்வி கொள்கை உறுதி செய்கிறது. இதை மீண்டும் வலியுறுத்த தேவையில்லை என நினைக்கிறேன்.

தேசிய கல்விகொள்கை 2020 அறிவிக்கப்பட்ட பின்புதான், ஜேஇஇ, நீட், யுஜிசி-நெட், இக்னோ நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டன. கல்வி நிறுவனங்களில் பலநியமனங்கள் நடந்தன. ஆனால், இதுவரை இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு புகார் கூட வரவில்லை.

தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டு நான்கு, ஐந்து மாதங்களுக்கு பின்பு, எந்தஆதாரமும் இல்லாமல் இந்த சந்தேகம் எழுப்புவதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

அனைத்து திட்டங்களும், கொள்கைகளும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூக பொருளாதாரத்தின் பின்தங்கியுள்ள இதர பிரிவினரையும் உள்ளடக்கும் புதியமுயற்சிகளுடன் தொடரும் என நான் வலியறுத்தி கூறுகிறேன்.

இது தொடர்பாக எந்தபுகார், வந்தால், அதற்கு எனது அமைச்சகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசித்துதான் தேசிய கல்விகொள்கை உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...