பா.ஜனதா ஆட்சி இருக்கும்வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிப்பார்

விஜயாப்புராவில் புதிதாக விமானநிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தபணிகளை நேற்று காலையில் துணை முதல்மந்திரி கோவிந்த் கார்ஜோள் பார்வையிட்டார். மேலும் பணிகளை விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் துணை முதல்மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

விஜயாப்புராவில் விமான நிலையம் அமைக்கும்பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் விமான நிலையம் அமைவதில் எனக்கு விருப்பம் இல்லை. முலவாடா பகுதியில் விமானநிலையம் அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அப்பகுதியில் எனக்கு சொந்தமாக நிலம் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு விமான நிலையம் அமைக்க நான் கூறுவதாகவும் சிலர் குற்றச்சாட்டு கூறினார்கள். அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

முலவாடா பகுதியில் அரசுக்கு சொந்தமான 2,500 ஏக்கா் நிலம் உள்ளது. அங்கு விமானநிலையம் அமைத்திருந்தால், அனைத்து வசதிகளும் கிடைத்திருக்கும். போதுமான இடவசதியும் விமான நிலையத்திற்கு கிடைத்திருக்கும். இந்தவிமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும். இதற்குதேவையான நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து வசதிகளும் இருக்கும்வகையில் விமான நிலையம் அமைக்கப்படும்.

முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பாக ஆட்சி நடத்திவருகிறார். அவருக்கு எதிராக சிலர் செயல்பட்டு வருகிறார்கள். முதல்மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அதுதொடர்பாக இதுவரை எந்தவிதமான ஆலோசனைகளும் நடைபெறவில்லை. எடியூரப்பாவிடம் இருந்து முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட இருப்பதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.

பா.ஜனதா ஆட்சி இருக்கும்வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார். அவரது தலைமையிலேயே பா.ஜனதா ஆட்சி நடைபெறும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...