பா.ஜனதா ஆட்சி இருக்கும்வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிப்பார்

விஜயாப்புராவில் புதிதாக விமானநிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தபணிகளை நேற்று காலையில் துணை முதல்மந்திரி கோவிந்த் கார்ஜோள் பார்வையிட்டார். மேலும் பணிகளை விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் துணை முதல்மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

விஜயாப்புராவில் விமான நிலையம் அமைக்கும்பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் விமான நிலையம் அமைவதில் எனக்கு விருப்பம் இல்லை. முலவாடா பகுதியில் விமானநிலையம் அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அப்பகுதியில் எனக்கு சொந்தமாக நிலம் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு விமான நிலையம் அமைக்க நான் கூறுவதாகவும் சிலர் குற்றச்சாட்டு கூறினார்கள். அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

முலவாடா பகுதியில் அரசுக்கு சொந்தமான 2,500 ஏக்கா் நிலம் உள்ளது. அங்கு விமானநிலையம் அமைத்திருந்தால், அனைத்து வசதிகளும் கிடைத்திருக்கும். போதுமான இடவசதியும் விமான நிலையத்திற்கு கிடைத்திருக்கும். இந்தவிமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும். இதற்குதேவையான நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து வசதிகளும் இருக்கும்வகையில் விமான நிலையம் அமைக்கப்படும்.

முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பாக ஆட்சி நடத்திவருகிறார். அவருக்கு எதிராக சிலர் செயல்பட்டு வருகிறார்கள். முதல்மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அதுதொடர்பாக இதுவரை எந்தவிதமான ஆலோசனைகளும் நடைபெறவில்லை. எடியூரப்பாவிடம் இருந்து முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட இருப்பதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.

பா.ஜனதா ஆட்சி இருக்கும்வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார். அவரது தலைமையிலேயே பா.ஜனதா ஆட்சி நடைபெறும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...