குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

 தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், வாந்தி, பிரசவ வலி, குடல் ரணம், நீர்க் கோவை மற்றும் பல.

சுகப் பிரசவமாக
தினமும் இரவில் காய்ச்சிய பாலில் குங்குமப் பூ கலந்து அருந்திவர நாளடைவில் சுகப் பிரசவம் ஆகும்.

வாய் மணக்க
கர்ப்பிணிகள் வெற்றிளையுடன் சிறிது குங்குமப் பூ, ரோஜா இதழ்கள் சேர்த்துச் சாப்பிட வாய் மணக்கும், மற்றும் செரிமான சக்தி உண்டாகும்.

கண்நோய் குணமாக
குங்குமப் பூவுடன் தாய்ப் பால் விட்டு அரைத்து, இரண்டு சொட்டு கண்களில் விட நாளடைவில் கண் நோய்கள் நீங்கும்.

குடல் புண் ஆற
அதிகமாக மது அருந்தி குடலில் புண் உள்ளவர்கள் இதே மாதிரி காய்ச்சிய பாலில் குங்குமப் பூவைக் கலந்து அருந்தி வர வேண்டும். கார பதார்த்தங்களை உண்ணக்கூடாது. இரவில் அதிகநேரம் கண் விழித்திருக்கக் கூடாது.

தலைவலி, ஜலதோஷம் நீங்க
குங்குமப் பூவைத் தாய்ப்பாலில் உரைத்து நெற்றியில் பற்றுப் போட்டுக் கொள்ள நாளடைவில் தலைவலி ஜலதோஷம் நீங்கும்; மற்றும் குங்குமப் பூவுடன் கொஞ்சம் பனை வெல்லம், விளாம் பிசின், அபின் இவைகளைச் சேர்த்தரைத்து ஒரு சிறு வெள்ளைத் தாளில் தடவி நெற்றியின் மீது பற்றுப் போட்டாலும் இப்பிணிகள் நீங்கும்.

பெண்கள் பருவமடைய
பெண்களுக்கு குங்குமப் பூவை, சில நாட்களுக்குத் தொடர்ந்து உண்ணக் கொடுக்க நாளடைவில் விரைவில் பருவமடைவர்.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...