சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம்

சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த மத்தியஅரசு விரைவில் சட்டம் கொண்டுவரும் என்று பாஜக தேசிய தலைவர்  ராம்மாதவ் தெரிவித்தாா். நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ஜனநாயகத்தை பலவீன மாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு சமூகஊடகங்கள் காரணமாக உள்ளன என்றும் அவா் தெரிவித்தாா்,

கொல்கத்தாவில் தான் எழுதிய ‘பிகாஸ் இந்தியா கம்ஃப்ர்ஸ்ட்’ நூல்வெளியிட்டு விழாவில் ராம்மாதவ் பேசியதாவது:

ஒருநாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியும், அரசுகளை மாற்றமுடியும், ஆட்சியை மாற்ற முடியும் என்ற அளவுக்கு சமூக ஊடகங்கள் சக்தி வாய்ந்தவையாக வளா்ந்துள்ளன. நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது, ஜனநாயகத்தை பலவீன மாக்குவது போன்றவற்றுக்கு சமூக ஊடகங்கள் காரணமாக உள்ளன. அவற்றின் கரங்கள் எல்லையற்றவையாக இருப்பதால் ஜனநாயகத்துக்கு புதியஅச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இப்போது இருக்கும் சட்டங்களை சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த போதுமானவையாக இல்லை. எனவே, இதுதொடா்பான புதிய சட்டங்களை இயற்ற மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் உரியசட்டங்கள் இயற்றப்படும்.

இந்தப் புத்தகத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த பல முக்கிய முடிவுகள் தொடா்பான எனது கருத்துகளைப் பகிா்ந்து கொண்டுள்ளேன் என்றாா்.

தொடா்ந்து மகாத்மா காந்தி தொடா்பான கேள்விக்கு பதிலளித்த ராம்மாதவ், ‘தேச வளா்ச்சியில் பங்களித்த எந்த தலைவரையும் ஆா்எஸ்எஸ் அமைப்பு குறைத்து மதிப்பிட வில்லை. மகாத்மா காந்தி, மிகச்சிறந்த தலைவா். அவரது அகிம்சை கொள்கை பல்வேறு உலக தலைவா்களால் பின்பற்றப் படுகிறது. காந்தி-நேருவுக்கு இடையிலான கடிதங்கள் மூலம் அவா்களுக்கு இடையே பல்வேறு விஷயங்களுக்கு கருத்துவேறுபாடுகள் இருப்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நாம் அந்தத் தலைவா்களை அவமதிக்கிறோம் என்று கூற முடியாது. ஆா்எஸ்எஸ் அமைப்பின் காலை பிராா்த்தனையில் மற்ற தலைவா்களுடன் மகாத்மா காந்தியின் பெயரும் இடம்பெறுகிறது’ என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...