தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் மதுரையில் கட்டப்பட்டுள்ள 1088 அடுக்குமாடி வீடுகளை பிரதமர் மோடி நேற்று காணொலிமூலம் திறந்துவைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். இதில் மதுரை அருகே ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1088 அடுக்குமாடி வீடுகளும் அடக்கம். தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் ரூ.89.75 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ரூ.8.25 லட்சத்தில் தலா 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள 1088 வீடுகள் மதுரை மாநகரில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளிகள் பங்குத் தொகை ரூ.19.03 கோடி ஆகும்.
இதனை பிரதமர் தொடங்கிவைத்த போது, ராஜாக்கூரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஆட்சியர் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். விரைவில் இந்தவீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |