யூனியன் பிரதேசங்களில் பிரதமர் மோடி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்

சில்வாசா: தாத்ரா – நாகர் ஹவேலி மற்றும் டாமன் – டையூ யூனியன் பிரதேசத்தில், 2,587 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

யூனியன் பிரதேசமான தாத்ரா – நாகர் ஹவேலி மற்றும் டாமன் – டையூவில் உள்ள சில்வாசாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 2,587 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.

இங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சில்வாசாவில், ‘நமோ’ மருத்துவமனையின் முதல் கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். 460 கோடி ரூபாய் செலவில், 450 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, தாத்ரா – நாகர் ஹவேலி மற்றும் டாமன் – டையூவில், சுகாதார சேவைகளை வலுப்படுத்தும்.

இது இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக பழங்குடி சமூகங்களுக்கு அதிநவீன மருத்துவ சேவையை வழங்கும்.

தொடர்ந்து, கிராம சாலைகள், பிற சாலை உட்கட்டமைப்பு, பள்ளிகள், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், பஞ்சாயத்து மற்றும் நிர்வாக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், கழிவுநீர் உட்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இந்த பயணத்தை முடித்து, குஜராத்தின் சூரத்துக்கு சென்ற பிரதமர் மோடி, சூரத் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை நேற்று மாலை துவக்கி வைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண் ...

திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும்  – பாஜக மாநில தலைவர் ''அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி; இறுதியான கூட்டணி'' ...

”தமிழக அரசு எனது போனை ஒட்டு கே ...

”தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது”- மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ''தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது'' என்று ...

விண்வெளியில் செயற்கைகோள்களின் ...

விண்வெளியில் செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விண்வெளியில் செயற்கைக்கோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...