உங்களால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின் வலியை என்றாவது உணர்ந்தீர்களா

மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியின் உடல்நிலை விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அதேநேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்ட பாஜக குடும்பத்தினரின் வலியை மம்தா என்றாவது உணர்ந்திருக்கிறாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்டத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், எதிர்க் கட்சியான பாஜகவும் தீவிரமாக இறங்கியுள்ளன.

பன்குரா மாவட்டத்தில் உள்ள ராணி பந்த் நகரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

”மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்குவந்தால், நிச்சயமாக 7-வது ஊதியக் குழுவை அரசு ஊழியர்களின் நலனுக்காக அமல்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறேன்.

தீதி (மம்தா) உங்கள் காலில்காயம் ஏற்பட்டபோது, நீங்கள் வலியை உணர்கிறீர்கள். உங்களின் காயம் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஆனால், 130 பாஜக தொண்டர்களை உங்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் கொலைசெய்தார்களே, அந்த 130 பாஜக தொண்டர்களின் தாய்மார்களின் உணர்வுகளை, வலியை, வேதனையை உணர்ந்திருக்கிறீர்களா. அந்த வலியை உணர ஏதாவதுமுயற்சி எடுத்திருக்கிறீர்களா?

பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் அடைந்தவேதனையை ஒருபோதும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். நிச்சயமாகத் தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களித்து சரியான பதிலடியை உங்களுக்கு வழங்குவார்கள்.

பாஜக ஆட்சிக்குவந்தால், மாநிலத்தில் உள்ள பழங்குடிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பழங்குடியினச் சான்றிதழ் வழங்குவதற்குக்கூட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கமிஷன் கேட்கிறார்கள். ஆனால், பழங்குடியினரின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என உறுதியளிக்கிறோம். அவர்களின்கல்வி, சுகாதாரம், குடிநீர் ஆகியவை மீது கவனம் செலுத்தப்படும். இதை நாங்கள் தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்துள்ளோம்”.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...