மக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டுவருவேன்

மக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டுவருவேன் “தி.மு.க-வும், காங்கிரஸும் திட்டமிட்டு உங்கள்மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். தூத்துக்குடியில் சரக்குப்பெட்டக மாற்று முனையம், துறைமுகத்திற்கு பிரதமர் மோடி மூவாயிரம் கோடி ரூபாயில் அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு ஆணையிட்டுள்ளார். அப்படி இருக்கும் போது இப்போ இங்கே இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன. ஏனென்றால் இது அரசியல். இந்ததேர்தலில் அவர்கள் எப்படியாவது வெற்றிபெற வேண்டும். பொய்சொல்லியாவது வெற்றி பெற வேண்டும். அதற்காக இதுபோன்ற புரளியை கிளப்பி விட்டு வருகின்றனர்.

துறைமுகம் மட்டுமல்ல நான்கு வழி சாலை கொண்டுவர கூடாது என்றார்கள். இரட்டை ரயில் பாதை கொண்டுவரக் கூடாது என்றார்கள். அங்கெல்லாம் யாருக்கும் எந்த பிரசனையும் கிடையாது. ஒவ்வொரு நலத்திட்டங்கள் வரும்போது பொய் பிரசாரங்களை செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக கன்னியாகுமரி மாவட்டமே அழிந்து விடும் என்ற நிலைக்கு பிரசாரம் செய்து வைத்துள்ளனர்.

104 கோடி ரூபாயில் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனை திட்டத்தை இல்லாமலாக ஆக்கிவிட்டனர். தென்னை ஆராய்ச்சி மையம் ஏறக்குறைய 10 ஏக்கர் நிலத்தில் கொண்டுவர இருந்தோம். அதையும் இல்லாமல் ஆக்கிவிட்டனர். இப்படி எல்லாம் திட்டத்தையும் இல்லாமல் ஆக்குவதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திட்டமிட்டு வேலை பார்க்கின்றனர்.

யார் நாசமாகப் போனாலும் பரவாயில்லை. அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் இதுதான் அவர்கள் நோக்கம். எனவே மீனவ சகோதரர்கள் தைரியமாக நம்பி உங்கள் வாக்குகளை எங்களுக்குத்தாருங்கள். உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது என்பதை நான் உறுதி கூறிக்கொள்கிறேன்” கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...