மக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டுவருவேன்

மக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டுவருவேன் “தி.மு.க-வும், காங்கிரஸும் திட்டமிட்டு உங்கள்மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். தூத்துக்குடியில் சரக்குப்பெட்டக மாற்று முனையம், துறைமுகத்திற்கு பிரதமர் மோடி மூவாயிரம் கோடி ரூபாயில் அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு ஆணையிட்டுள்ளார். அப்படி இருக்கும் போது இப்போ இங்கே இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன. ஏனென்றால் இது அரசியல். இந்ததேர்தலில் அவர்கள் எப்படியாவது வெற்றிபெற வேண்டும். பொய்சொல்லியாவது வெற்றி பெற வேண்டும். அதற்காக இதுபோன்ற புரளியை கிளப்பி விட்டு வருகின்றனர்.

துறைமுகம் மட்டுமல்ல நான்கு வழி சாலை கொண்டுவர கூடாது என்றார்கள். இரட்டை ரயில் பாதை கொண்டுவரக் கூடாது என்றார்கள். அங்கெல்லாம் யாருக்கும் எந்த பிரசனையும் கிடையாது. ஒவ்வொரு நலத்திட்டங்கள் வரும்போது பொய் பிரசாரங்களை செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக கன்னியாகுமரி மாவட்டமே அழிந்து விடும் என்ற நிலைக்கு பிரசாரம் செய்து வைத்துள்ளனர்.

104 கோடி ரூபாயில் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனை திட்டத்தை இல்லாமலாக ஆக்கிவிட்டனர். தென்னை ஆராய்ச்சி மையம் ஏறக்குறைய 10 ஏக்கர் நிலத்தில் கொண்டுவர இருந்தோம். அதையும் இல்லாமல் ஆக்கிவிட்டனர். இப்படி எல்லாம் திட்டத்தையும் இல்லாமல் ஆக்குவதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திட்டமிட்டு வேலை பார்க்கின்றனர்.

யார் நாசமாகப் போனாலும் பரவாயில்லை. அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் இதுதான் அவர்கள் நோக்கம். எனவே மீனவ சகோதரர்கள் தைரியமாக நம்பி உங்கள் வாக்குகளை எங்களுக்குத்தாருங்கள். உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது என்பதை நான் உறுதி கூறிக்கொள்கிறேன்” கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...