கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை கொண்டுவந்துள்ளோம்

தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய வெற்றியாகஅமையும். ஏராளமான திட்டங்கள் தமிழகத்தில் வந்துகுவிய வேண்டும். தமிழக மக்கள் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோகமான வரவேற்பு இருக்கிறது. நரேந்திரமோடி மீது இவ்வளவுபெரிய நம்பிக்கையை மக்கள் வைத்திருப்பது உள்ளத்தை உருக்கக்கூடிய வகையில் உள்ளது. வருகின்ற தேர்தலில் தமிழகத்தினுடைய பங்கு பெரியதாக இருக்கும். அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றிஎன்பது பாரத அன்னையினுடைய நெற்றியில் அமையக்கூடிய திலகமாக அமையும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம்கோடி ரூபாய்க்கான திட்டங்களை ஐந்து ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளோம். அதற்குமுன்னர் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமைந்தவைதான். 2014 முதல் 2019 வரை நாங்கள் பலதிட்டங்களை கொண்டு வந்தோம். அப்படி கொண்டு வந்த திட்டங்களை முடித்து வைக்கக்கூடிய அளவில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நான்குவழிச் சாலை என்பது தனிப்பட்ட மனிதனுக்கு சொந்தமானவிஷயம் அல்ல. இந்தியா முழுமைக்கும் இருக்கக்கூடிய பயணிகளுக்கு வசதிசெய்து கொடுக்கும் திட்டமாகும்.

2019-க்கு பிறகு நான்குவழிச் சாலை உள்ளிட்ட திட்டங்கள் ஏன் நிறுத்தப்பட்டன. மேலும், 1,041 கோடி ரூபாய் இந்ததிட்டத்திற்காக மத்திய அரசு கொடுத்துள்ளது. அந்த பணத்தில் ஏறக்குறைய 350 கோடி ரூபாய் பழைய ஒப்பந்ததாரருக்கு நஷ்டஈடு வழங்கி இருக்கின்றோம். மக்களின் வரிப்பணத்தில் எவ்வளவுபெரிய இழப்பு. நான்குவழிச் சாலை காரணமாக இழப்பீடு கொடுக்கப்பட்டதற்கு யார்பொறுப்பு? நான்குவழிச் சாலையை கொண்டுவரக் கூடாது என அமைச்சர் மனோ தங்கராஜ் 2019-ம் வருடம் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதெல்லாம்சேர்ந்துதான் சாலை பணி நிற்பதற்கு காரணம். பாராளுமன்ற உறுப்பினர் சில நாள்களுக்கு முன்பு கொடுத்த அறிக்கையில், இந்ததிட்டம் வராமல் போனதற்கு பா.ஜ.க-தான் காரணம் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார். அவருக்குவெட்கம் கிடையாதா? கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா? மக்களை இவர்கள் ஏமாற்றுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கனிமவளங்களை கடத்த தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டுகிறது. மத்திய அரசின் ஆணையின் பெயரில்தான் நாங்கள் கனிமவளம் கொண்டுபோகிறோம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் சொல்கிறார். மத்திய அரசாங்கம் என்ன ஆணை அனுப்பி இருக்கிறது சொல்லுங்கள் என இரண்டு மாதங்களுக்கு முன்பே நாங்கள் எழுத்து பூர்வமாக கேட்டுள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டும் அரசினுடைய ஆணையை எடுக்கமுடியவில்லை. அப்படி என்றால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதானே அர்த்தம். கனிம வளங்கள் கொண்டுபோகும் நூற்றுக்கணக்கான லாரிகள் யாருக்கு சொந்தமான லாரிகள்… யாருடைய பினாமிபெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு அமைச்சர் மனோதங்கராஜ் பதில் சொல்லட்டும். கல்வி உதவித்தொகை கொடுத்தால் அனைவருக்கும் கொடுங்கள் என்றோம். ஆகவே இந்து மாணவர்களுக்கு நியாயம் வழங்கப் பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட மக்களை பிரித்து சூழ்ச்சி செய்து அரசியல் நடத்தியதுபோதும். சாதியின் பெயரிலோ, மதத்தின் பெயரிலோ, மொழியின் பெயரிலோ அரசியலை வைத்தோ எந்த காரணத்தைக் கொண்டும் எங்கள் மக்களை நாங்கள் பிரிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம். எல்லா மக்களுடைய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய முடியுமோ அது அனைத்தையும் நாங்கள் செய்வோம்.

நம் கனிம வளங்களை காப்பாற்றும் கட்டாயம் நிலைமையில் நாம்இருக்கிறோம். கனிமவள டாரஸ் லாரிகள் மூலமாக ஒன்றரை மாதத்திற்குள் ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் சொல்ல வேண்டும். ஆறு பேர் கொலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ்தான் காரணம். அதில் நான்கு பேர் கிறிஸ்தவர்கள். அவருக்கு கிறிஸ்தவர்களைப்பற்றி கவலை கிடையாது, சாதிக்காரர்களைப் பற்றி கவலை கிடையாது, தி.மு.க-வினரைப்பற்றியும் கவலை கிடையாது. எல்லாம் சொந்த காரியம், சிந்தாபாத் என்று நடந்து கொண்டிருக்கிறார். டாரஸ் லாரிகள் மூலமாக இங்கிருந்து ஒரு லாரி மண்கூட தேவையில்லாமல் கேரளாவுக்கு கடத்தக் கூடாது. கெஜ்ரிவாலை திடீரென கைதுசெய்து விட்டார்களா…

22 முறை அவருக்கு விசாரணைக்குவர வேண்டும் என்று அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில்பயமில்லை என முதலிலேயே அவர் போய் ஆஜராகி இருக்கவேண்டும். ஏன் போகவில்லை… நீங்கள் சி.எம்-ஆக இருந்தால் எல்லாத்துக்கும் மேல் உள்ளவரா… தேர்தல் வந்தால் என்னை யாரும் தொடமாட்டார்கள் என்று நினைத்து அவர் செயல்பட்டார். யாராக இருந்தாலும் தவறுசெய்தால் தண்டனை அனுபவித்து ஆக வேண்டும். பொன்முடி விவகாரத்தில் கோர்ட் றியதுபற்றி கேட்கிறீர்கள். நீட்டும் பேப்பரில் எல்லாம் கையெழுத்து போடுவது ஆளுநர் வேலை கிடையாது. இதற்கு முன்பு இருந்த ஆளுநர்களைப் போன்று ஒரு ரப்பர் ஸ்டாம்ப் நமக்கு தேவையா. சிந்திக்கக்கூடிய ஆளுநர் வேண்டாமா… அமைச்சரவை என்ன நோக்கத்தோடு எதை செய்கிறது என்பதை பார்த்து அதை முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது”

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியது  ,

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...