பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவநடவடிக்கை: மோடி தலைமையிலான அரசுக்கு வல்லமை

பாகிஸ்தான் விடுக்கும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்காக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வல்லமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உளவுத்துறை தாக்கல்செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போா்மூள வாய்ப்பில்லை. ஆனால், இரு நாடுகளுக்கிடையேயான சிக்கல்களால் பதற்றச்சூழல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் முன்பிருந்த அரசுகளைப்போல அல்லாமல், பிரதமா் மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன்கொண்டது. அதன் காரணமாக, அணுசக்தி வலிமை கொண்ட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தநிலை, ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து வன்முறைகளும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நிகழ வழிவகுக்கும். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா ரத்துசெய்ததை தொடா்ந்து, இருநாடுகளும் தங்கள் தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான், இராக், சிரியாவில் நடைபெற்று வரும்போரில் அமெரிக்க படைகள் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழல், சா்வதேச அமைதிக்கு சவால்விடுக்கும் வகையிலேயே உள்ளது.

ஆப்கானிஸ்தான் போரில் தலிபான்கள் அதிகபலனடைய வாய்ப்புள்ளது. தலிபான்களுக்கு எதிராக அந்நாட்டு கூட்டணி அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. எனினும், கூட்டணி அரசுக்கான ஆதரவை சிலா் திரும்ப பெற்றால் அந்நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படும். இது தலிபான்களுக்கு சாதகமாக அமையக்கூடும்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல், லிபியாவில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு, ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு பகுதிகளில் காணப்படும் பதற்றமான நிலை ஆகியவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...