பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவநடவடிக்கை: மோடி தலைமையிலான அரசுக்கு வல்லமை

பாகிஸ்தான் விடுக்கும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்காக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வல்லமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உளவுத்துறை தாக்கல்செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போா்மூள வாய்ப்பில்லை. ஆனால், இரு நாடுகளுக்கிடையேயான சிக்கல்களால் பதற்றச்சூழல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் முன்பிருந்த அரசுகளைப்போல அல்லாமல், பிரதமா் மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன்கொண்டது. அதன் காரணமாக, அணுசக்தி வலிமை கொண்ட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தநிலை, ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து வன்முறைகளும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நிகழ வழிவகுக்கும். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா ரத்துசெய்ததை தொடா்ந்து, இருநாடுகளும் தங்கள் தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான், இராக், சிரியாவில் நடைபெற்று வரும்போரில் அமெரிக்க படைகள் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழல், சா்வதேச அமைதிக்கு சவால்விடுக்கும் வகையிலேயே உள்ளது.

ஆப்கானிஸ்தான் போரில் தலிபான்கள் அதிகபலனடைய வாய்ப்புள்ளது. தலிபான்களுக்கு எதிராக அந்நாட்டு கூட்டணி அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. எனினும், கூட்டணி அரசுக்கான ஆதரவை சிலா் திரும்ப பெற்றால் அந்நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படும். இது தலிபான்களுக்கு சாதகமாக அமையக்கூடும்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல், லிபியாவில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு, ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு பகுதிகளில் காணப்படும் பதற்றமான நிலை ஆகியவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...