நாட்டை வளா்ச்சி அடையச் செய்வதற்கு வலுவான போக்கு வரத்து அவசியம்

உலகின் நீண்ட நதி நீா் போக்குவரத்து வசதியைத் தொடக்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி, நாட்டை வளா்ச்சி அடையச் செய்வதற்கு வலுவான போக்கு வரத்துவசதிகள் அவசியம் என்றாா்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கும் அஸ்ஸாமின் திப்ரூகருக்கும் இடையே சுமாா் 3,200 கி.மீ. தொலைவுக்கு பயணம் மேற்கொள்ளும் ‘எம்வி கங்கா விலாஸ்’ என்ற பயணிகள் கப்பலின் சேவையை பிரதமா் மோடி வெள்ளிக் கிழமை காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தாா்.

இரு நகரங்களுக்கு இடையேயான பயணத்தை 51 நாள்களுக்கு அக்கப்பல் மேற்கொள்ளும். வழியில் 27 நதிகளை அக்கப்பல் கடக்கும். உத்தரபிரதேசம், பிகாா், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைக் கடந்து வங்க தேசத்துக்குள் நுழைந்து பின்னா் அஸ்ஸாமின் திப்ரூகா் நகரை அக்கப்பல் அடையும்.

அத்துடன் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் அமைக்கப் பட்டுள்ள கூடார நகரத்தையும் (டென்ட் சிட்டி) பிரதமா் மோடி காணொலி வாயிலாகத் திறந்துவைத்தாா். சுற்றுலா பயணிகளைக் கவரும் நோக்கில் நூற்றுக்கணக்கான கூடாரங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உத்தர பிரதேசம், பிகாா், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் உள்நாட்டு நீா்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சுமாா் ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

உலகின் நீண்ட நதிநீா் போக்கு வரத்து வசதி காசிக்கும் திப்ரூகருக்கும் இடையே இப்போது தொடக்கி வைக்கப் பட்டுள்ளது. இது வடக்கு இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை சா்வதேசளவில் பிரபலப்படுத்த உதவும். இது மிகப்பெரிய திருப்பு முனையாக அமைவதோடு நாட்டில் சுற்றுலாவுக்கான புதிய அத்தியா யத்தையும் தொடக்கும். நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த உதவுவதோடு புதிய வேலை வாய்ப்புகளையும் இத்திட்டம் உருவாக்கும்.

இந்தியா்களின் வாழ்வில் கங்கை நதி மிக முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு கங்கை நதி கரைப் பகுதிகளில் வளா்ச்சிப்பணிகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்பட வில்லை. அதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் அங்கிருந்து வெளியேறினா். இந்தப் பிரச்னைக்கு இருவழிகளில் தீா்வு காணப்பட்டது. முதலில் தூய்மைகங்கை திட்டத்தின் வாயிலாக கங்கை நதி தூய்மைப்படுத்தப்பட்டது. மற்றொரு புறம் கங்கை நதியைச் சாா்ந்த பொருளாதார நடவடிக்கைகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கங்கை நதி பாயும் மாநிலங்கள் அனைத்தும் பலனடைந்தன.

 

நாட்டை வளா்ச்சி யடையச் செய்வதற்கு வலுவான போக்கு வரத்து வசதிகள் அவசியம். நாட்டில் வா்த்தகம், சுற்றுலா ஆகிய துறைகளை மேம்படுத்து வதற்கு நதிகள் முக்கியபங்கு வகிக்கும். வரலாற்று ரீதியில் இந்தியாவில் நதி நீா்ப் போக்குவரத்து அதிகமாகப் பயன் படுத்தப் பட்டுள்ளது.

ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நதிநீா்ப் போக்குவரத்தை அதிகரிப் பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டது. நதிநீா் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்த தனிச் சட்டங்களும் விரிவான செயல் திட்டங்களும் வகுக்கப்பட்டன.

நாட்டில் 2014-ஆம் ஆண்டில் 5 தேசிய நீா் வழித் தடங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அது 111-ஆக அதிகரித்துள்ளது. அதில் சுமாா் 25 வழித் தடங்கள் பயன் பாட்டுக்கு வந்துவிட்டன. 8 ஆண்டுகளுக்கு முன் நதி நீா் வழியான சரக்குப் போக்குவரத்து 30 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. தற்போது அது 3 மடங்கு அதிகரித்துள்ளது.

துறைமுகம் சாா்ந்த வளா்ச்சியை ஊக்குவிப் பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் 125 நதிகளில் சரக்கு, பயணிகள் கப்பல் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. நாட்டின் மற்ற பகுதிகளில் கப்பல்சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...