ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முதல்வராக தேர்வு

வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் முன்னணி கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட எம்எல்ஏக்களால் பாஜக சட்டமன்ற கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக அசாமில் ஆட்சிக்குவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அசாம் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 52 வயதான ஹிமந்தா பிஸ்வாசர்மா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறும் சர்பானந்த் சோனோவால் மற்றும் கட்சியின் நான்குமத்திய பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

சர்மாவின்பெயரை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அறிவித்த நிலையில், சர்பானந்த் சோனோவால், பாஜகவின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சர்மாவின் பெயரை முன்மொழிந்தார். மற்றவர்கள் அதைஆதரித்தனர்.

நரேந்திர சிங் தோமரைத் தவிர, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் மற்றும் கட்சியின் தேசியதுணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டா ஆகியோரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் மத்திய பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

2001 முதல் ஐந்தாவது முறையாக ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மா, சோனோவால் அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சராக இருந்தார். டெல்லியில் உள்ள பாஜகதலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நீற்று நடந்த மூன்று சுற்று கூட்டங்களுக்குப் பிறகு இன்று குவஹாத்தியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் சர்பானந்த் சோனோவால், சர்மா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் உடனிருந்தனர்.

அசாமின் பூர்வீக சோனோவால்-கச்சாரி பழங்குடியினரைச் சேர்ந்த சோனோவால் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு வடகிழக்குஜனநாயகக் கூட்டணியின் அழைப்பாளராக இருக்கும் சர்மா ஆகியோர் சமீபத்தில் நடந்த மூன்றுகட்ட மார்ச்-ஏப்ரல் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வழிநடத்தினர்.

126 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில், பாஜக 60 இடங்களையும், அதன்கூட்டணி கட்சிகளான அசோம் கணபரிஷத் (ஏஜிபி) ஒன்பது இடங்களையும், யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (யுபிபிஎல்) ஆறுஇடங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...