பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புகவுன்சிலின் ஆகஸ்ட்டு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப்பிரதமர் என்ற பெருமையைப் நரேந்திர மோடி பெறவுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக 2 ஆண்டுகாலம் செயல்படும். இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த ஜனவரிமாதத்தில் பொறுப்பேற்றது.

பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை சுழற்சிமுறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும். இதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான பொறுப்பை இந்தியா ஞாயிற்றுக் கிழமை ஏற்றுக் கொண்டது.

75ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட உள்ள நிலையில், தலைமைபொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா. சபையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரபிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதில், கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனைகளும், சிரியா உள்ளிட்ட நாடுகளின்விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா ஆகியோர் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. கடந்த 1992ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு சபைகூட்டத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கலந்துகொண்டார். எனினும், முதல் முறையாக பாதுகாப்பு சபையின் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் டி.எஸ்.திருமூர்த்தி, கூறுகையில், “ஆகஸ்ட் மாதத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தலைமைஏற்கும் இந்தியா, கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய 3 விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தஉள்ளது. அமைதிகாப்புப் படையினரின் நினைவாக நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த உள்ளது. சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன், மத்தியகிழக்கு நாடுகள் தொடர்பான குறித்தும் முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புசபைக்கு முதன்முறையாக 1950ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா தலைமைவகித்தது. இதனை தொடர்ந்து, 10ஆவது முறையாக இந்தியா தலைமை வகிக்கிறது. இதற்குமுன்னதாக 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்புசபை இயங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...