பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புகவுன்சிலின் ஆகஸ்ட்டு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப்பிரதமர் என்ற பெருமையைப் நரேந்திர மோடி பெறவுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக 2 ஆண்டுகாலம் செயல்படும். இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த ஜனவரிமாதத்தில் பொறுப்பேற்றது.

பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை சுழற்சிமுறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும். இதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான பொறுப்பை இந்தியா ஞாயிற்றுக் கிழமை ஏற்றுக் கொண்டது.

75ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட உள்ள நிலையில், தலைமைபொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா. சபையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரபிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதில், கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனைகளும், சிரியா உள்ளிட்ட நாடுகளின்விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா ஆகியோர் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. கடந்த 1992ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு சபைகூட்டத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கலந்துகொண்டார். எனினும், முதல் முறையாக பாதுகாப்பு சபையின் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் டி.எஸ்.திருமூர்த்தி, கூறுகையில், “ஆகஸ்ட் மாதத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தலைமைஏற்கும் இந்தியா, கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய 3 விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தஉள்ளது. அமைதிகாப்புப் படையினரின் நினைவாக நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த உள்ளது. சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன், மத்தியகிழக்கு நாடுகள் தொடர்பான குறித்தும் முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புசபைக்கு முதன்முறையாக 1950ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா தலைமைவகித்தது. இதனை தொடர்ந்து, 10ஆவது முறையாக இந்தியா தலைமை வகிக்கிறது. இதற்குமுன்னதாக 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்புசபை இயங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...